Showing posts with label காஞ்சீபுரம். Show all posts
Showing posts with label காஞ்சீபுரம். Show all posts
Wednesday, September 07, 2016
On Wednesday, September 07, 2016 by Unknown in காஞ்சீபுரம்
டி.யூ.ஜே கண்டனம் !
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் செய்தி சேகரிக்க சென்ற ஜீனியர் விகடன் செய்தியாளர் ஜெயவேல் என்பரை கல்லூரி நிர்வாகம் செல்போன், கேமரா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து செய்தியாளர் ஜெயவேலை கல்லூரிக்கு கடத்திச்சென்று கல்லூரியில் வைத்துள்ளனர்.
காவல்துறைக்கு தகவல் தந்தபுன்பு, செய்தியாளர் ஜெயவேலை காவல்துறையினர் மீட்டனர்.
இச்செயலை டி.யூ.ஜே வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை உடனே கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பத்திரிகையாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு மட்டுமல்ல, உயிர் பாதுகாப்புகூட இல்லாத நிலை தற்போது இருந்து வருகிறது.
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநிலத் தலைவர்
டி.யூ.ஜே
Thursday, November 13, 2014
மத்திய மந்திரியும், தமிழக பா.ஜனதா கட்சியின் மேலிட பார்வையாளருமான ராஜீவ்பிரதாப் ரூடி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 5 தமிழக மீனவர்களை மீட்க பிரதமர் மோடி உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறார். அதுபோல் இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய அரசு இலங்கையில் உள்ள தூதரகத்தின் மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. படகுகளுடன் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Saturday, October 11, 2014
மாமல்லபுரம் அருகே ஏ.டி.எம். காவலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் கைது செய்யப்பட்டார். கூட்டாளிகள் 3 பேரை தேடி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிருஷ்ணன்காரணை சத்யசாய்பாபா கோவில் அருகில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம். மைய காவலாளி முருகன் கடந்த ஜூன் மாதம் 14–ந் தேதி நள்ளிரவு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் கருவியால் உடைக்க நடந்த முயற்சி தோல்வி அடைந்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டனர்.
இந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் தீவிர விசாரணையில், ஓய்வுபெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகன் முக்கிய குற்றவாளியாக ஈடுபட்டுள்ளார் என்பதும் அவருக்கு துணையாக 3 பேர் இருந்ததும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
செங்கல்பட்டு பொன்விளைந்தகளத்தூர் சாலையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான சதீஷ்குமார்(வயது 32) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் திருப்போரூர் மேலையூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரன் என்பவரது மகன் ஆவார்
மேலும் சதீஷ்குமாருக்கு துணையாக வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்த அன்பழகன், திருநாவுக்கரசு, திருக்கழுக்குன்றம் தேவராஜ் ஆகிய 3 பேரும் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள இந்த 3 பேரும் விரைவில் பிடிபடுவார்கள் என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் உத்திரமேரூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டார். சதீஷ்குமார் மீது ஏற்கனவே அவரது கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த வழக்கு மற்றும் ஓட்டேரி, திருப்போரூர், மறைமலைநகர், மேல்மருவத்தூர் போன்ற பகுதிகளில் கார், மோட்டார் சைக்கிள் திருட்டு என பல திருட்டு வழக்குகள் உள்ளன.
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா பள்ளியகரம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன்(52). இவரது நண்பர் பள்ளியகரம் கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரது மனைவி சபியா சுல்தானா.
இவர்கள் தங்களது விவசாய நிலங்களை கோதண்டன் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொடுக்கும்படி குமாரவாடி கிராம நிர்வாக அலுவலர் கோ.தேவேந்திரனிடம் விண்ணப்பித்தனர்.அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். அதன்பின்பு ரூ.4 ஆயிரம் கேட்டதாக தெரிகிறது. லஞ்ச பணத்தை தருவதாக ஒப்புக்கொண்ட கோதண்டன் இதுகுறித்து காஞ்சீபுரம் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
பின்னர் நேற்று கோதண்டன் தேவேந்திரனிடம் ரூ. 4ஆயிரம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஊழல் தடுப்பு போலீசார் தேவேந்திரனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
காஞ்சீபுரம் அருகே பஸ்– லாரி மோதிய விபத்தில் 22 பேர் காயம் அடைந்தனர்
காஞ்சீபுரத்தை அடுத்த திருமால்பூர் அருகே உள்ள கணபதிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு 40 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் நிறுவனத்தின் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை கணபதிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார்.
காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரை–வேடல் கிராமத்துக்கு அருகே அந்த தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சென்னையில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியது.
இதில் பஸ் டிரைவர் மணிகண்டன், சாலையை கடக்க முயன்ற வேடல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 55) இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தொழிலாளர்கள் நாகேந்திரன், சொக்கலிங்கம், அருள், சீனிவாசன், உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.மாதவன், சப்–இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சிவக்குமார், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தொழிற்சாலை நிர்வாகத்தினர் காயம் அடைந்தவர்களை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
படுகாயம் அடைந்த பஸ் டிரைவர் மணிகண்டன், ஏழுமலை ஆகியோர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...


