Showing posts with label தர்மபுரி. Show all posts
Showing posts with label தர்மபுரி. Show all posts
Thursday, September 18, 2014
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மாணவி கற்பழித்து கொலை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிட்டம்பட்டியை அடுத்த தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாட்டுக்காரன் என்கிற பூசாரி. இவரது மகன் மாதப்பன். விவசாயி. மாதப்பனின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு செவ்வந்தி (வயது 15) என்ற மகள் இருந்தார். செவ்வந்தி பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை தினமும் கோவிந்தசாமி பள்ளிக்கு கூட்டி செல்வது வழக்கம். கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5–ந் தேதி கோவிந்தசாமி விவசாய வேலைக்காக வெளியே சென்று விட்டார். இதனால் சித்ரா மாணவியை மாதப்பனுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அப்போது மாதப்பன் தொட்லாம்பட்டி ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றிற்கு மாணவியை கடத்தி சென்றார். அங்கு வைத்து அவரை கற்பழித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை அதே கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டார்.
விவசாயிக்கு ஆயுள் தண்டனை
அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் மாணவி உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மாதப்பனை போலீசார் கைது வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீரா சுமதி குற்றம்சாட்டப்பட்ட விவசாயி மாதப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை நிவாரண உதவியாக அந்த மாணவியின் குடும்பத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மாணவி கற்பழித்து கொலை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிட்டம்பட்டியை அடுத்த தொட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாட்டுக்காரன் என்கிற பூசாரி. இவரது மகன் மாதப்பன். விவசாயி. மாதப்பனின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு செவ்வந்தி (வயது 15) என்ற மகள் இருந்தார். செவ்வந்தி பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை தினமும் கோவிந்தசாமி பள்ளிக்கு கூட்டி செல்வது வழக்கம். கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5–ந் தேதி கோவிந்தசாமி விவசாய வேலைக்காக வெளியே சென்று விட்டார். இதனால் சித்ரா மாணவியை மாதப்பனுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அப்போது மாதப்பன் தொட்லாம்பட்டி ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றிற்கு மாணவியை கடத்தி சென்றார். அங்கு வைத்து அவரை கற்பழித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை அதே கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டார்.
விவசாயிக்கு ஆயுள் தண்டனை
அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் மாணவி உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மாதப்பனை போலீசார் கைது வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீரா சுமதி குற்றம்சாட்டப்பட்ட விவசாயி மாதப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை நிவாரண உதவியாக அந்த மாணவியின் குடும்பத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
