Friday, September 09, 2016
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
தட்டார்மடம் அருகிலுள்ள வைரவம் கிராமத்தை சேர்ந்தவர் ஈனன். இவர் விவசாய தொழில் செய்து வந்தார். இன்று காலை கொம்மடிக்கோட்டை அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அருகில் மரம் வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின் கம்பியில் மரம் விழுந்து மின்சாரம் தாக்கி ஈனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தட்டார்மடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய திருவிழா.
சொக்கன்குடியிருப்பில் நலம் தரும் மாதா என்று சொல்லப்படும் அதிசய மணல் மாதா ஆலயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மணல் மாதா ஆலய திருவிழா நடைபெறும். அதுபோல இந்த வருடமும் இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.10வது நாள் சப்பர பவனி நடைபெறும்.திருவிழாவை காண பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருவார்கள். இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.