Saturday, May 23, 2020

On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 23

திருச்சியில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
பிறந்த நாளை முன்னிட்டு அரசின் சார்பில் அவரது திருவுருவச்சிலைக்கு
மாவட்ட ஆட்சியர்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களது 1345 - வது பிறந்த நாள் விழா அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று காலை 8.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், வருவாய் துறை கோட்டாச்சியர் விஸ்வநாதன் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொது மக்களின் நலன் கருதியும கொரோனா வைரஸ் நோய் தொற்று
பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே
144தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பொது மக்கள் மற்றும் எந்த கட்சியினரும் அமைப்பும் 
கலந்து கொள்ள வேண்டாம் எனவும்,
மேலும், திருவுருவச்சிலைக்கு
செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திகிறார்..
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் Covid-19 சிறப்பு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர்*


கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசு  கடந்த மார்ச் முதல் தற்போது வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் சாமானியர்கள் நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்.

இன்று திருச்சி மாவட்ட மத்திய வங்கியின் Covid-19 சிறப்பு கடனாக  நகைக்கடன் மிகக் குறைந்த வட்டியில் 58 பைசாவில் சுய உதவி குழுக்களின் மூலம் சிறப்பு கடன் வழங்கப்படுகிறது.

நகை கடன் திட்டத்தின் கீழ் கிராமிற்கு 3,000 ரூபாய் வீதம் 7% குறைந்த வட்டி வீதத்தில் 6 மாத காலத்திற்கு நபர் ஒருவருக்கு  ஒரு 5,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் 2660 குழுக்களும் சங்க அளவில் 1190 குழுக்களும் உள்ளது.

இதில் Covid-19 சிறப்பு கடன் உதவிக்கு தகுதியுள்ள 75 குழுக்களுக்கு ரூ62.50 லட்சம் கடன்  வழங்கப்பட்டது.

இதில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன் துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Friday, May 22, 2020

On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த தெருநாயை மீட்ட தீயணைப்புதுறை.
மீட்கச் சென்ற அதிகாரியிடம் பரிவுகாட்டி அமைதியாக நின்ற நாய்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி பகுதியில் உள்ள சுமார் 40 அடி ஆழமுள்ள ஒரு கிணற்றில் இன்று காலை அந்த வழியாக சுற்றித் திரியும் தெருநாய் ஒன்று கிணற்றில் இருந்த சுமார் 2 அடி நீரில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிவதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டி கிணற்றில் இறங்கினர். ஆனால் நாய் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் தயங்கி தயங்கி தீயணைப்பு துறை அதிகாரி கிணற்றில் இறங்கவே அவரைக் கண்டதும் நாய் அமைதியாக நின்று தன்னை மீட்க உதவிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்வகுபோல் மிகவும் பரிவு காட்டியது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நாயின் மீது கயிற்றை கட்டி கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு சென்றனர்.
அதன் பின்னர் கயிற்கை அவிழ்த்து விடும் வரை அமைதியாக நின்று கொண்டிருந்த பின்னர் கயிறு அவிழ்த்து விடப்பட்டதும் அங்கிருந்து மெதுவாக புறப்பட்டுச் சென்றது.
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
சுதந்திரத்திற்கு பின் 
நம்நாட்டிலேயே அகதிகள் போல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்வதற்கு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்.
ஜோதிமணி எம்.பி.பேட்டி.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கிருமி நாசினி இயந்திரம் மற்றும் முழுகவச உடை உள்ளிட்டவைகளை கரூர் எம்.பி.ஜோதிமணி வழங்கினார்.
பின்னர் சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.
இந்த நேரத்திலும் கூட டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது என்பது மிகுந்த வேதனை என்ற நிலையிலும் மேலும் 2 மணி நேரத்தை கூட்டியிருப்பது அதை விட வேதனை.
நம் நாட்டில் சுதந்திரத்திற்கு பின் சொந்த நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அகதிகளைப் போல் காலில் ரத்தம் வடிய நடந்து செல்வது மிகுந்த வேதனையை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் அப்படி ஏதும் கொடுக்கப்படவில்லை. அப்படியானால் ஒரு லட்சம் கோடியை மக்களின் வங்கிக் கணக்கில் 7500 வீதம் செலுத்தி இருக்கலாம் என்று கூறினார்.
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 22

சமூக இடை வெளியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து தமிழகத்தில்  அமைச்சர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் நலத்திட்டங்களை வழங்கி  வருகின்றனர். 


ஊரடங்கு உத்தரவு ஆரம்பத்திலிருந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார் அதன் ஒரு பகுதியாக இன்று  திருச்சி கிழக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் பொது மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த 45 நாட்களுக்கு மேலாக  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் பொதுமக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் தொடர்ந்து   தொகுதிக்கு உட்பட்ட வார்டு வாரியாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இன்று திருச்சி காஜப்பேட்டை தண்ணீர் தொட்டி 
வளாகத்தில்
 பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஜவகர், வெல்லமண்டி சண்முகம், சந்திரு, கணேஷ் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் 
தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா 
வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 68 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 66 நபர்கள்
பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகைபுரிந்த 282 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டதில் 278 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 
நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க  வேண்டும்விழித்திரு - 
விலகி இரு - வீட்டில் இரு என்பதை கடைபிடிக்க  வேண்டும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை 
கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொது மக்கள் அனைவரும் முழு 
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
திருச்சியிலிருந்து 773வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டனர்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி தொடர்பாக தடை உத்தரவு அமலில் 
உள்ளதால் தமிழக முதலமைச்சர் அவர்கள் வெளிமாநில 
தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்தந்த மாநிலங்களுக்கு 
பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஆணையிட்டுள்ளார்.
அதன்படி 15
மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த புலம் பெயர்ந்த இராஜஸ்தான் மாநிலத்தை 
சேர்ந்த தொழிலாளர்கள் 773 நபர்கள் திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சன் ரயில் 
நிலையத்திலிருந்து சமூக இடைவெளி கடைபிடித்து இரவு உணவு வழங்கி
சிறப்பு இரயில் மூலம் பயணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிவராசு இன்று (22.05.2020) அனுப்பி வைத்தார்
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 
அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 தேதி 
அவரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை 
செய்யப்படுகிறது. 

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1345-வது பிறந்த நாள் 
விழா அவரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 
மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் 
சிவராசு அறிவிப்பு 

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1345-வது பிறந்த நாள் விழா 
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலும்  தெரிவித்ததாவது
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 144 – தடை உத்தரவு அமலில் 
உள்ளதால் பொது மக்களின் நலன் கருதியும் கொரோனா வைரஸ் நோய் தொற்று
பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
எனவே வருகின்ற (23.5.2020) அன்று மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களது 1345 - வது பிறந்த நாள் விழா அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு 
அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மட்டும் மாலை அணிவித்து மரியாதை 
செலுத்துவார்கள். 144 – தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பொது மக்கள் 
கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் திருவுருவச்சிலைக்கு 
செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறதுஇவ்வாறு மாவட்ட 
ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
On Friday, May 22, 2020 by Tamilnewstv in    
திருச்சி மன்னார்புரத்தில்  அமைந்துள்ள எல்பின் நிறுவனம் பற்றியும் நிறுவனத் தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர். கே என்னும் ரமேஷ் குமார் பற்றியும் அறம் மக்கள் நல சங்கம் பொது சேவை என்ற பெயரில் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்தும் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக பொதுமக்கள் என் மாறுவதை தடுக்கும் விதமாக விரிவான செய்திகள் வெளியிட்டு இருந்தோம்.  


இன்று நாம் எந்த செய்தியும் வெளியிடவில்லை. அவர்களது எல்பின் நிறுவனத்தில் உள்ள முக்கிய லீடர் ஒருவர் நிறுவனத் தலைவர் ராஜாவுக்கு அனுப்பிய ஆடியோ பதிவை கேட்ட பின்பாவது பொதுமக்கள் விழிப்படைய வேண்டும் என்பதே நமது நோக்கம். இந்த ஆடியோ வெளியிட்ட சங்கரிடம்  காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு இந்நிறுவனத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே  சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.