Sunday, August 24, 2014
திருப்பூரில் மசானிக் சங்கம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
திருப்பூரில் மசானிக் சங்கம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அகில இந்திய தலைவர் வாசுதேவ் ஜம்நாபிகார் மசுரேக்கர் அடிக்கல் நாட்டினார்.
மசானிக் சங்கமானது இந்திய மற்றும் அல்லது உலகம் முழுவதும் உள்ளது. இந்த சங்கம் சார்பில் பல்வேறு மக்கள் பணிகள் செய்யபட்டு வருகின்றனர்.திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சைபர் கிரைம் விழிப்புணர்வு முகாம், கணபதிபாளையம் வி.ஏ.டி.ட்ரஸ்டுடன் இணைந்து இலவச இருதய நோய் பரிசோதனை முகாம், பள்ளி மாணவர்களுக்கு தேவையான டெஸ்க். டேபிள்,சேர் போன்ற பல்வேறு நலப்பன்களை செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி முருகம்பாளையம் ரிங் ரோட்டில் ரூ.40 லட்சம் மதிப்பில் திருப்பூர் மசானிக் சங்கம் எண்.324 க்கான புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் தென் இந்திய மசானிக் தலைவர் ஏ.பி.சித்ரா வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அகில இந்திய மசானிக் இயக்கத்தின் தலைவர் வாசுதேவ் ஜம்நாபிகார் மசுரேக்கர் கலந்து கொண்டு முறைப்படி அடிக்கல் நாட்டி சிரபுரையாய்ற்றினார்.தென் இந்திய மசானிக் தலைவர் ஏ.பி.சித்ரா வாழ்த்தி பேசினார். முன்னதாக திருப்பூர் மசானிக் சங்கத் தலைவர் வி.வரதராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் பகுதி சங்க செயலாளர் ஏ.பாலசுப்பிரமணியம், டி.எஸ்.சாமிநாதன்,தொழில் அதிபர் கே.பி.கே.செல்வராஜ், ஆடிட்டர் செல்வராஜ்,ஜெகநாதன், சாமியப்பன், செந்தில், சிவகுமார், முத்துசாமி,டாக்டர் கள் கணேஷ்,மணி, திருமலைசாமி மற்றும் அனைத்து இந்தியாவிலிருந்து இந்த இயக்கத்தின் பல்வேறு அங்கத்தினர்களும், திருப்பூர் நகர் பிரமுகர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment