Friday, August 08, 2014

On Friday, August 08, 2014 by Unknown in , ,


திருப்பூர் ஆக 8.   திருப்பூர்  சுப்பையா  பள்ளி  மற்றும்  போலிஸ்  கிளப்  இணைந்து  நடத்தும் 2 ம்  ஆண்டு  கால்பந்து  போட்டி  நடைபெற்றது .

    திருப்பூர்  சுப்பையா  பள்ளி  மற்றும்  போலிஸ்  கிளப்  இணைந்து  நடத்தும் 2 ம்  ஆண்டு  கால்பந்து  போட்டி  02-8.2014 முதல்  03-08-2014  ஆகிய  2 நாட்கள்  நடைபெற்றது ,  இதில்  12 வயதிக்குரிய  கான  கால்பந்து  போட்டி  நடைபெற்றது . இதில்  சிறப்பு  விருந்தினர்  திரு . MR . திருநாவுக்கரசு . காவல்  துணை  ஆணையர்  அவர்கள்  கலந்து  கொண்டு  வெற்றி  பெற்ற  மாணவர்களுக்கு  பரிசுகள்  மற்றும்  கோப்பைகள்  வழங்கினார் .  இதில் 24 அணிகள்  கலந்துகொண்டனர்  இதில்  சி .எஸ் .ஐ. ஈரோடு  ஸ்டேன்ஸ்  ஸ்கூல்  கோவை , சுப்பையா  ஜெயின்  ஜோசப் , ஏ .வி .பி . அபாகஸ் , மைக்ரோ  கிட்ஸ் , பிரண்ட்லைன்  பிரண்ட்லைன்  மிலேனியம் ,  பிரண்ட்  லைன்  நிகிதா ,  திருப்பூர்  கால்பந்து  அகடாமி ,  கிட்ஸ்  கிளப்  பிளேட்டோஸ் , டி  பப்ளிக் , குருகுலம் , ஆகிய  அணிகள்  கலந்து  கொண்டன .  இறுதி  போட்டியில்  மைக்ரோ  கிட்ஸ்   அணியும்  பிரண்ட்லைன்  அணியும்  மோதின   இதில்  மைக்ரோ  கிட்ஸ்  அணியை 4-2. கோல்   கணக்கில்  பிரண்ட்லைன்  பள்ளி  வெற்றி  பெற்றது .  பரிசளிப்பு  விழாவில்  சிறப்பு  விருந்தினராக  கலந்துகொண்ட  திருப்பூர்  மாவட்ட  காவல்  துணை  ஆணையர்  திரு .திருநாவுகரசு  பிரண்ட்லைன்  பள்ளி  மாணவர்களுக்கு  கோப்பையை   வழங்கினார் .