Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in Movies
பல தடைகளை தாண்டி ரசிகர்களின் பேராதரவோடு இன்று வெளியாகியிருக்கிறது ஜிகர்தண்டா.
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்திச் சென்ற ‘பீட்சா’ பட இயக்குனரின் அடுத்த படைப்பு தான் இந்த ஜிகர்தண்டா.
மதுரை என்றாலே சமீப காலமாக வெட்டுக்குத்து என்று தான் வருகிறது, அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல, ஆனால் இதில் சித்தார்த் போன்ற சாக்லேட் ஹீரோவை இக்கதையில் கொண்டு வந்ததற்காகவே கார்த்திக் சுப்புராஜை பாராட்டலாம்.
படத்தின் கதையாக பார்த்தோமேயானால் குறும்படப் போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் சித்தார்த் அங்கு நீதிபதியாக வரும் பிரபல இயக்குநரான நாசரால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார். ஆனால் இன்னொரு நீதிபதியான நரேனுக்கோ சித்தார்த்தின் படம் மிகவும் பிடித்துப் போய்விடுகின்றது.
இதனால் இரு இயக்குநர்களுக்குகிடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. கோபத்தின் உச்சிக்கு செல்லும் நரேன் தானே சித்தார்த்தின் படத்தை தயாரிக்கப் போவதாக நிகழ்ச்சியில் பொதுவில் அறிவிப்பு செய்கின்றார்.
ஆனால் நரேனின் அலுவலகம் சென்ற சித்தார்த்திற்கோ அதிர்ச்சி காத்திருக்கிறது. காரணம் ஒரு ரவுடி கும்பல் பற்றிய கதையை தான் தயாரிப்பேன் என்று நரேன் சித்தார்த்திடம் கூறுகின்றார்.
தயாரிப்பாளர் கூறியது போல் ரவுடி கும்பல் பற்றிய வித்தியாசமான கதையை தேடி அலையும் சித்தார்த், மதுரையில் மிகப் பெரிய ரவுடியான சேதுவின் வாழ்க்கையை படமாக எடுக்க அவரை தேடி மதுரைக்கே செல்கிறார்.
ரவுடி சேது பற்றிய கதையை எவ்வாறு தெரிந்து கொள்கிறார். அந்த படத்தை இயக்கினாரா? அதில் யார் கதாநாயகனாக நடித்தது? என பல திருப்பங்களுடன் பின்பாதி கதை நகர்கின்றது.
படத்தின் பலமே திரைக்கதை தான், அதேபோல் பல டுவிஸ்ட்டுகள் அங்கே அங்கே இருப்பது ரசிக்கும் ரகம். சித்தார்த்தின் எதார்த்த நடிப்பு எல்லோரையும் ரசிக்க வைக்கிறது, அதையும் தாண்டி நம்மை கவர்வது சிம்ஹா தான்,வில்லத்தனமான சிரிப்பு, நடை உடை, பாவனை என அனைத்து அசைவிலும் ஒரு ரௌத்திரம் ஆடிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்
சந்தோஷ் நாராயணன் இசை மிகவும் வலு சேர்க்கிறது, குறிப்பாக பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஆரியின் ஒளிப்பதிவு நம்மை மதுரைக்கே அழைத்து செல்கிறது. குறிப்பாக இண்டர்வல் பிளாக் முன்னாடி வருகிற மழை காட்சியில் நம்மை பிரமிக்க வைக்கிறார்.
பலவீனம் என்று பார்த்தால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், இனி எத்தனை காலத்திற்கு தான் மதுரை என்றாலே அடிதடி என்று காட்டுவார்களோ!
இந்த படத்தின் முலம் தலை சிறந்த இயக்குனர்கள் வரிசைக்கு கார்த்திக் சுப்புராஜ் செல்ல ஆரம்பித்து விட்டார். முதல் பாதி வேறு மாதிரி காட்டிவிட்டு இரண்டாம் பாதியை எதிர்மறையாகவும் அமைக்கலாம் என்று பின் வரும் சந்ததிக்கு ஒரு விதை விதைத்துள்ளார் நம்ம கார்த்திக்.
உண்மையில் இந்த படத்தை ஏதோ தமிழில் க்வென்டின் டரான்டினோ இயக்கியது போலவே இருந்தது.
மொத்தத்தில் மதுரையின் ஜிகர்தண்டா எப்போதும் நம்மை ஏமாற்றுவதில்லை, செம்ம டேஸ்ட் மா !
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...