Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in Sports

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான். | கோப்புப் படம்
இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆண்டர்சன் தொடர்ந்து வசையில் ஈடுபட வேண்டும் என்று மைக்கேல் வான் கூறியுள்ளார்.
கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டையும், பந்தையும் தவிர வீரர்கள் பேசுவது, வசைபாடுவது முறையல்ல என்கிறார் மைக்கேல் ஹோல்டிங், ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்ந்து இந்திய வீரர்களை நோக்கி வசைமாரி பொழியவேண்டும் என்கிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான்.
"4வது டெஸ்ட் போட்டியிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய வீரர்கள் மீது வசையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் மீண்டுமொரு முறை அவர்கள் ஆண்டர்சன் மீது புகார் எழுப்பாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவர் இங்கிலாந்துக்காக தொடரை வென்று கொடுப்பவர், தேவையில்லாமல் புகாரில் சிக்கி அவர் பலவீனமடைந்து விடக்கூடாது.
கடந்த ஆண்டு மைக்கேல் கிளார்க், ஆண்டர்சனை நோக்கிக் கூறிய வசை வார்த்தை அல்லது ஆண்டர்சன் தோனியை நோக்கி கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிக்கும் போது நடுவர் குறுக்கிட்டு கண்டிக்க வேண்டும்.
இது போன்ற கெட்ட வார்த்தைகள் விவகாரத்தில் தன் பெயர் இழுக்கப்படுவதை ஜேம்ஸ் ஆண்டர்சன் விரும்ப மாட்டார். அவருக்கு இளம் வாரிசுகள் உள்ளனர். அவர்களுக்கு இத்தகைய வார்த்தைகளை தம் தந்தை பயன்படுத்துகிறார் என்று தெரிவது நல்லதல்ல.
ஷிகர் தவன், தோனி ஆகியோர் ஆண்டர்சன், பிராட் பந்து வீச்சில் திக்கித் திணறிவருகின்றனர். அதை நினைவுபடுத்தினாலே போதும், தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டியதில்லை.
ஆண்டர்சனை விளையாடும் போது தோனி அங்கும் இங்குமாக அலைந்து திக்கி திணறுகிறார். அதனை நினைவுபடுத்தினாலே போதுமானது. அந்த வகையில் ஆண்டர்சன் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்யலாம்” என்கிறார் மைக்கேல் வான்.
கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டையும், பந்தையும் தவிர வீரர்கள் பேசுவது, வசைபாடுவது முறையல்ல என்கிறார் மைக்கேல் ஹோல்டிங், ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்ந்து இந்திய வீரர்களை நோக்கி வசைமாரி பொழியவேண்டும் என்கிறார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான்.
"4வது டெஸ்ட் போட்டியிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய வீரர்கள் மீது வசையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் மீண்டுமொரு முறை அவர்கள் ஆண்டர்சன் மீது புகார் எழுப்பாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவர் இங்கிலாந்துக்காக தொடரை வென்று கொடுப்பவர், தேவையில்லாமல் புகாரில் சிக்கி அவர் பலவீனமடைந்து விடக்கூடாது.
கடந்த ஆண்டு மைக்கேல் கிளார்க், ஆண்டர்சனை நோக்கிக் கூறிய வசை வார்த்தை அல்லது ஆண்டர்சன் தோனியை நோக்கி கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிக்கும் போது நடுவர் குறுக்கிட்டு கண்டிக்க வேண்டும்.
இது போன்ற கெட்ட வார்த்தைகள் விவகாரத்தில் தன் பெயர் இழுக்கப்படுவதை ஜேம்ஸ் ஆண்டர்சன் விரும்ப மாட்டார். அவருக்கு இளம் வாரிசுகள் உள்ளனர். அவர்களுக்கு இத்தகைய வார்த்தைகளை தம் தந்தை பயன்படுத்துகிறார் என்று தெரிவது நல்லதல்ல.
ஷிகர் தவன், தோனி ஆகியோர் ஆண்டர்சன், பிராட் பந்து வீச்சில் திக்கித் திணறிவருகின்றனர். அதை நினைவுபடுத்தினாலே போதும், தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டியதில்லை.
ஆண்டர்சனை விளையாடும் போது தோனி அங்கும் இங்குமாக அலைந்து திக்கி திணறுகிறார். அதனை நினைவுபடுத்தினாலே போதுமானது. அந்த வகையில் ஆண்டர்சன் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்யலாம்” என்கிறார் மைக்கேல் வான்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...