Monday, September 22, 2014
பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக் கோரி விஜயாபுரம், கவுண்டம்பாளையம் பகுதி விவசாயிகள் பொங்கலூர் பிஏபி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொங்கலூர் பகுதியில் 2-ஆம் மண்டலத்திற்கு பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு பாசனம் நடைபெற்று வருகிறது. பெத்தாம்பாளையம் பிரதான வாய்க்காலில் இருந்து தண்ணீர், பெருந்தொழுவு பகுதி பாசனத்திற்கு பின்னர் விஜயாபுரம், கவுண்டன்பாளையம் பகுதிக்கு விட வேண்டும். அதன்படி திறந்து விடப்பட்ட தண்ணீர் 2 மணி நேரம் மட்டுமே விடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டதாம்.
இதனால் ஆவேசமடைந்த விஜயாபுரம், கவுண்டம்பாளையம் பகுதி விவசாயிகள், பொங்கலூர் பிஏபி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த பிஏபி உதவிப் பொறியாளர் சிங்காரவேலு, அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் வினோத் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விரைவில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 
0 comments:
Post a Comment