Monday, September 22, 2014
பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக் கோரி விஜயாபுரம், கவுண்டம்பாளையம் பகுதி விவசாயிகள் பொங்கலூர் பிஏபி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொங்கலூர் பகுதியில் 2-ஆம் மண்டலத்திற்கு பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு பாசனம் நடைபெற்று வருகிறது. பெத்தாம்பாளையம் பிரதான வாய்க்காலில் இருந்து தண்ணீர், பெருந்தொழுவு பகுதி பாசனத்திற்கு பின்னர் விஜயாபுரம், கவுண்டன்பாளையம் பகுதிக்கு விட வேண்டும். அதன்படி திறந்து விடப்பட்ட தண்ணீர் 2 மணி நேரம் மட்டுமே விடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டதாம்.
இதனால் ஆவேசமடைந்த விஜயாபுரம், கவுண்டம்பாளையம் பகுதி விவசாயிகள், பொங்கலூர் பிஏபி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த பிஏபி உதவிப் பொறியாளர் சிங்காரவேலு, அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் வினோத் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விரைவில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
0 comments:
Post a Comment