Saturday, September 13, 2014
அவினாசி காமராஜர் நகர் குடியிருப்பு நல சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் வேலுமணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குமாரராஜா, செயலாளர் துரைசாமி, துணைச் செயலாளர் நடராஜ், பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
காமராஜ் நகரில் சாக்கடை வசதி இல்லாததால் ஒவ்வொரு வீட்டின் முன்புறமும், கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கட்டித் தரவேண்டும். பூங்காவில் குழந்தைகள் விளையாட உபகரணங்கள் தரவேண்டும்.
பூங்காவின் வடபகுதியில் புதர்மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாடுகின்றன. இப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். பூங்காவில் நடைபயிற்சி செய்ய அக்குபஞ்சர் கல் பதிக்க வேண்டும்.
பூங்காவின் சுற்றுப் புறத்தில் அமைக்கப்பட்ட கம்பி வேலிகள் கீழே இறங்கிவிட்டதால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் உள்ளே வர ஏதுவாக உள்ளது. எனவே கம்பி வேலியை சரி செய்ய வேண்டும்.
இப்பகுதியில் பாலித்தீன் பைகள், காகித குப்பைகள் நிறைந்துள்ளது. எனவே வீதி கூட்டுபவர்கள் அன்றாடம் இங்கு வந்து சுத்தம் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் அவினாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment