Saturday, September 13, 2014
கோவை, செப்.13–
கோவை சவுரி பாளையம் அருகேயுள்ள உடையாம்பாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 46). இவர் சவுரிபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள தங்கரத்தினம் காம்ப்ளக்சில் ஸ்ரீ ஹரி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக தங்க, வெள்ளி நகைகள் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் நேற்று இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் சங்கரின் நகைக்கடையில் கொள்ளை நடந்திருப்பதாக சிலர் தகவல் தெரிவித்தனர். உடனே சங்கர் நகை கடைக்கு விரைந்து வந்தார்.
பின்னர் பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மறு நிமிடமே பீளமேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார், சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் மணிவர்மன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
நள்ளிரவில் யாரோ மர்ம மனிதர்கள் காம்ப்ளக்சிற்குள் புகுந்து முதல் மாடியில் உள்ள சங்கரின் நகைக்கடைக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு கடைக்கு முன்பு உள்ள கிரில் கம்பியில் வெளியில் இருந்து பார்த்தால் மாடியில் என்ன நடக்கிறது என்று தெரியாத வண்ணம் கருப்பு நிற அட்டை பொருத்தியுள்ளனர். பின்னர் வெல்டிங் மிஷின் எந்திரத்தின் உதவியுடன் நகைக்கடையின் ஷட்டரை ஒரு நபர் உள்ளே நுழையும் அளவுக்கு வெட்டி எடுத்துள்ளனர்.
அதன்வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கு ஷோகேசில் இருந்த 1¼ கிலோ தங்க நகைளை மூட்டையாக கட்டி எடுத்து கொண்டு தப்பிவிட்டனர். ஆனால் கடையில் இருந்த வெள்ளி நகைகளை அவர்கள் தொடவில்லை.
அவை அப்படியே ஷோகேசில் இருந்தன. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
அது கொள்ளை நடந்த கடையில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று படுத்து கொண்டது. நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment