Saturday, September 13, 2014
கோவை, செப்.13–
கோவை சவுரி பாளையம் அருகேயுள்ள உடையாம்பாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 46). இவர் சவுரிபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள தங்கரத்தினம் காம்ப்ளக்சில் ஸ்ரீ ஹரி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக தங்க, வெள்ளி நகைகள் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் நேற்று இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் சங்கரின் நகைக்கடையில் கொள்ளை நடந்திருப்பதாக சிலர் தகவல் தெரிவித்தனர். உடனே சங்கர் நகை கடைக்கு விரைந்து வந்தார்.
பின்னர் பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மறு நிமிடமே பீளமேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார், சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் மணிவர்மன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
நள்ளிரவில் யாரோ மர்ம மனிதர்கள் காம்ப்ளக்சிற்குள் புகுந்து முதல் மாடியில் உள்ள சங்கரின் நகைக்கடைக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு கடைக்கு முன்பு உள்ள கிரில் கம்பியில் வெளியில் இருந்து பார்த்தால் மாடியில் என்ன நடக்கிறது என்று தெரியாத வண்ணம் கருப்பு நிற அட்டை பொருத்தியுள்ளனர். பின்னர் வெல்டிங் மிஷின் எந்திரத்தின் உதவியுடன் நகைக்கடையின் ஷட்டரை ஒரு நபர் உள்ளே நுழையும் அளவுக்கு வெட்டி எடுத்துள்ளனர்.
அதன்வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கு ஷோகேசில் இருந்த 1¼ கிலோ தங்க நகைளை மூட்டையாக கட்டி எடுத்து கொண்டு தப்பிவிட்டனர். ஆனால் கடையில் இருந்த வெள்ளி நகைகளை அவர்கள் தொடவில்லை.
அவை அப்படியே ஷோகேசில் இருந்தன. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
அது கொள்ளை நடந்த கடையில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று படுத்து கொண்டது. நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment