Saturday, September 13, 2014
கோவை, செப்.13–
கோவை சவுரி பாளையம் அருகேயுள்ள உடையாம்பாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 46). இவர் சவுரிபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள தங்கரத்தினம் காம்ப்ளக்சில் ஸ்ரீ ஹரி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக தங்க, வெள்ளி நகைகள் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் நேற்று இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் சங்கரின் நகைக்கடையில் கொள்ளை நடந்திருப்பதாக சிலர் தகவல் தெரிவித்தனர். உடனே சங்கர் நகை கடைக்கு விரைந்து வந்தார்.
பின்னர் பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மறு நிமிடமே பீளமேடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்குமார், சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் மணிவர்மன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
நள்ளிரவில் யாரோ மர்ம மனிதர்கள் காம்ப்ளக்சிற்குள் புகுந்து முதல் மாடியில் உள்ள சங்கரின் நகைக்கடைக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு கடைக்கு முன்பு உள்ள கிரில் கம்பியில் வெளியில் இருந்து பார்த்தால் மாடியில் என்ன நடக்கிறது என்று தெரியாத வண்ணம் கருப்பு நிற அட்டை பொருத்தியுள்ளனர். பின்னர் வெல்டிங் மிஷின் எந்திரத்தின் உதவியுடன் நகைக்கடையின் ஷட்டரை ஒரு நபர் உள்ளே நுழையும் அளவுக்கு வெட்டி எடுத்துள்ளனர்.
அதன்வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கு ஷோகேசில் இருந்த 1¼ கிலோ தங்க நகைளை மூட்டையாக கட்டி எடுத்து கொண்டு தப்பிவிட்டனர். ஆனால் கடையில் இருந்த வெள்ளி நகைகளை அவர்கள் தொடவில்லை.
அவை அப்படியே ஷோகேசில் இருந்தன. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
அது கொள்ளை நடந்த கடையில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று படுத்து கொண்டது. நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment