Saturday, September 13, 2014
கோவை, செப். 13–
கோவை மாநகர ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் முத்துசாமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திபுரம் பஸ் நிலையத்தில் இவருக்கும் தனியார் பஸ் டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அந்த தனியார் பஸ் டிரைவர், போலீஸ்காரர் முத்துசாமியை அடித்ததாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து அந்த பஸ்சை மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் முன் 7 பேர் சேர்ந்து வழிமறித்து டிரைவரை தாக்கினார்கள். இந்த சம்பவம் போலீஸ்காரர் முத்துசாமியின் தூண்டுதலின்பேரில் தான் நடந்ததாக புகார் கூறப்பட்டது.
இது குறித்து விசாரிக்குமாறு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் முத்துசாமி விதிமுறையை மீறி செயல்பட்டது தெரிய வந்தது. அதன்பேரில் முத்துசாமியை பணி இடைநீக்கம் செய்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment