Saturday, October 11, 2014
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்து ஒரு நாள் போட்டி, மூன்று டெஸ்ட் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முதலில் ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் இன்று பகல்–இரவு ஆட்டமாக நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. இதன் படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேர்த்தியான ஆட்டத்தை கடைபிடித்தது. 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக சாமுவேல்ஸ் 116 பந்துகளில் 126 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தியா தரப்பில் முகம்மது சமி 66 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்க ஜோடி 8.4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் பிரிந்தது. ரகேனா 24 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின்னர் வந்த விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ராயுடு (2), ரெய்னா(0) தோனி (8) என அடுத்தது ஆட்டமிழந்ததால் இந்திய அணி 114 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரளவு நிலைத்து ஆடிய தவானும் 92 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 41 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்க ஜோடி 8.4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் பிரிந்தது. ரகேனா 24 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் பின்னர் வந்த விராட் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ராயுடு (2), ரெய்னா(0) தோனி (8) என அடுத்தது ஆட்டமிழந்ததால் இந்திய அணி 114 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரளவு நிலைத்து ஆடிய தவானும் 92 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 41 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment