Sunday, October 19, 2014
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
உடுமலை காந்தி சவுக் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 32). பழக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது தாயாரை பார்ப்பதற்காக சென்று விட்டு உடுமலைக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலனி அருகே வந்தபோது ஒரு வாலிபர் கையை காட்டி மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தினார்.
குணசேகரன் மோட்டார்சைக்கிளை நிறுத்தியதும், அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.420–ஐ பறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் தான் அங்கிருந்து குறிப்பிட்ட தூரம் சென்று மறையும் வரை சத்தம் போடக்கூடாது என்று எச்சரித்து விட்டு புறப்பட்டதாகவும், சிறிது தூரம் சென்றதும் குணசேகரன் திருடன், திருடன் என்று சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது. உடனே சத்தம் கேட்டு அங்குவந்தவர்களை அந்த வாலிபர் மிரட்டி தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து குணசேகரன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உடுமலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்ததாக கூறப்படும் வாலிபரை தேடிவந்தனர். போலீசாருடன் குணசேகரன் வழிப்பறி செய்த வாலிபரை அடையாளம் காட்டுவதற்காக சென்றார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை உடுமலை–பழனி ரோட்டில் மத்திய பஸ் நிலையம் அருகே சென்றபோது அங்கு அந்த வாலிபர் வந்துகொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாலிபரிடம் கத்தி மற்றும் ஆயுதம் இருந்தது.இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தாலப்பள்ளியைச் சேர்ந்த பொம்மணன் என்கிற ராசப்பன் என்பவரது மகன் கோவிந்தராஜ் (வயது 24) என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் உடுமலை காந்தி நகரைச் சேர்ந்த விவேகானந்தன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த 9½ பவுன் நகையை திருடி சென்றதும் தெரியவந்ததுஇதேபோல் செந்தில்குமார் என்பவரது வீட்டின் பின்புறம் கதவை உடைத்து வீட்டில் இருந்து 3¾ பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடியதும், அண்ணா குடியிருப்பில் வெளியூர் சென்றிருந்த ஈஸ்வரசாமி என்பவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த ரூ.650 ரொக்க பணம், கைக்கடிகாரம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது.
இதைதொடர்ந்து வாலிபர் கோவிந்தராஜ் கொடுத்த தகவலின் பேரில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசுகளை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதேபோல் பல வழிப்பறி, திருட்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment