Wednesday, April 08, 2015
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ரூ 120 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது . மேலும் இப்பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ .125 கோடியில் கல்லூரி மாணவியர் விடுதி ,பிற்பட்டோர் நலத்துறை மூலம் கல்லூரி மாணவியர் விடுதி ஆகிய கட்டடங்கள் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது . இப்பணிகளை மாவட்ட ஆட்சிதலைவர் திரு .கு .கோவிந்தராஜ் இ ஆ .ப .அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க உத்திரவிட்டார் . முன்னதாக உடுமலைபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டார் . மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தார் ,டின் ,இரும்பு கம்பிகளின் இருப்புகளை பார்வையிட்டார் மேலும் அம்மா சிமெண்ட் மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்படும் சிமெண்ட் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ள குடோன்களை ஆய்வு செய்தார் . சிமெண்ட் குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் மூட்டைகளின் இருப்பு பதிவேட்டினை பார்வையிட்டார் கம்பி சிமெண்ட் ஆகியவற்றை வளர்ச்சி நடைபெறும் இடங்களுக்கு விரைந்து அனுப்பி வைத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார் . இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் [பொ ]ஊரக வளர்ச்சி முகமை திரு .ரூபன் சங்கர்ராஜ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் [வளர்ச்சி ] திரு .எஸ் .கார்த்திகை இரத்தினம் ,உடுமலை வருவாய் கோட்டாட்சியர் திரு .சாதனைக்குரள் ,ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்ப்பொறியாளர் திரு .நாகேந்திரன் ,வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் திரு .பழனிவேல் ,திரு .முகமது உசேன் ,உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் திரு .சைபுதீன் ,உடுமலை நகராட்சி ஆணையர் திரு .கெ .சரவணக்குமார் மற்றும் அரசு அலுவலகர்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...




0 comments:
Post a Comment