Saturday, September 24, 2016

உடுமலை,உடுமலையில் கடைகளை அடைக்க வலியுறுத்தியதாக இந்து முன்னணியினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.கடைகளை அடைக்க வலியுறுத்தல்
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் உடுமலையில் நேற்று காலை கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. இதற்கிடையில் இந்து முன்னணியினர் சிலர் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் அங்கு திறந்திருந்த கடைகளை அடைக்கும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.இதன் பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மேற்பார்வையில் அங்கு போலீசார் விரைந்தனர். அத்துடன் அங்கு கடைகளை அடைக்க வலியுறுத்தியதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும் இந்து முன்னணியை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.21 பேர் கைது
மேலும், ஆங்காங்கே கடைகளை அடைக்க வலியுறுத்தியதாக இந்து முன்னணியை சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடுமலை நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் வ.உ.சி. வீதி உள்ளிட்ட வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.சில வீதிகளில் ஒரு சில கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின. ஆனால் பெரும்பாலான பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது. காலையில் அடைக்கப்பட்டிருந்த கடைகள் பிற்பகலில் அடுத்தடுத்து திறக்கப்பட்டன
Total Pageviews
News
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 
 
 
 
0 comments:
Post a Comment