Thursday, September 29, 2016
பாரதீய ஜனதா பிரமுகர் கடைக்கு தீ வைப்பு சம்பவத்தால் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சாலை மறியல் போராட்டம்திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோட்டில் உள்ள பாரதீய ஜனதா கட்சி பிரமுகரின் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்து முன்னணி மற்றும் பாரதீய ஜனதா அமைப்பாளர்கள், தொண்டர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. உடனடியாக அங்கு 50–க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அங்கு திடீரென பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு சில கடைகளும் அடைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் அங்கு திரண்ட பாரதீய ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த கோரியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காங்கேயம் கிராஸ் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் உறுதி
மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷங்களையும் எழுப்பினார்கள். அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் அறிவுறுத்தலின்படி அந்த பகுதியில் உள்ள கடைகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட ஆரம்பித்தது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment