Sunday, May 06, 2018

On Sunday, May 06, 2018 by Tamilnewstv   
திருச்சி 05.05.18


இன்று நீட் தேர்வு நடப்பதையடுத்து தமிழகம் முழுவதும் 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 82 ஆயிரத்து 272 பேர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 170 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 பேர் தேர்வு எழுத முடியும்.

 திருச்சி மாவட்டத்தில் நீட் தேர்வானது 12 மையங்களில் இன்று நடைபெறுகிறது. இதில் 9420 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.

தற்போது நாம் நிற்கும் பகுதியான திருச்சி காஜா நகர் சமது பள்ளியில் 1200 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் பிரிவினர் 7.30 மணி முதல் 8.30 மணி வரையும், 2 வது பிரிவினர் 8.30 மணி முதல் 9.30 மணி வரையும் தேர்வு எழுதும் அறைக்கு வர வேண்டும் என நீட் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு காணப்பட்ட கெடுபிடி காரணமாக இந்த ஆண்டு தேர்வு எழுத வந்த மாணவிகள் முன்னெச்சரிக்கையாக காது களில் தோடு அணியாமலும், Free hair என்று சொல்லக்கூடிய வகையிலும் வந்திருந்தனர். கூடுதலான மாணவிகள் துப்பட்டாக் கூட அணியவில்லை மேலும் மாணவிகள் கொலுசு அணிந்து வருவதற்கும் தடை என்பதால், கொலுசு அணிந்து வந்த மாணவிகள் அவசர அவசர மாக கொலுசுகளை கழட்டி பெற்றோரிடம் வழங்கினர்.

புகைப்படம் இரண்டு எடுத்து வர வேண்டும். எனக் கூறப்பட்டுள்ள நிலையல் ஒரு சில மாணவர்கள் ஒரு புகைப்படம் மட்டுமே எடுத்த வந்தனர் அவர்களுக்கு உடனடியாக இலவசமாக புகைப்படம் எடுத்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள்  தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாணவர்கள் தேர்வு மையங்கள் சென்று வர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வயலூர் அமிர்தா வித்யாலயா 540 தேர்வர்களும்,

வயலூர் பாரதியார் நகர் காவேரி குளோபல் பள்ளி 660 தேர்வர்களும்,

திருச்சி கமலா நிகேதன் மான்டிசோரி பள்ளி 840 தேர்வர்களும்,

திருச்சி துப்பாக்கி பேட்டை அருகில் உள்ள எண்:1 கேந்திரவித்யாலயா 600 தேர்வர்களும்,

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அருகில் உள்ள எண்:2 கேந்திரவித்யாலயாவில் 1200 தேர்வர்களும்,

 தென்னூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு வித்யாலயா 480 தேர்வர்களும்,

காட்டூர் மான்ட்போர்ட் பள்ளி 660 தேர்வர்களும்,

திருச்சி காஜா நகர், சமத் மேல்நிலைப்பள்ளி 1200 தேர்வர்களும்,

 பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரி 1440 தேர்வர்களும்,

ஸ்ரீரங்கம் ஸ்ரீவிகாஸ்  வித்யாஸ்ரமம் முதுநிலை இடைநிலைப்பள்ளி 720 தேர்வர்களும்,

திருச்சி சென்னை ரிங் ரோடு ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி 600 தேர்வர்களும்,

 திருவானைக்கோவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா 480 தேர்வர்களும் என

 மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 9420 மாணவ, மாணவியர்கள், 12 தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.

0 comments: