Tuesday, March 03, 2020

On Tuesday, March 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி


தமிழகத்தில் உள்ள மத்திய அரசு தொழில் நிறுவனங்களில் தமிழக  இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் -  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு தொழில் நிறுவனங்களில் தமிழக  இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் -  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் வலியுறுத்தல்

தமிழக அரசே எங்கே  எனது வேலை என கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 21ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை 1 கோடி இளைஞர்களை  சந்தித்து கையெழுத்து இயக்கத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாநகர் மாவட்ட மணிகண்ட ஒன்றியத்தின்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
 சார்பில் திருச்சி  சோமரசம்பேட்டையில் மாவட்ட துணை தலைவர் ராஜா முகமது தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கை எழுத்து
இயக்கத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.  கூட்டத்தில் திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆனந்த், விவசாய அணி செயலாளர் துரைப்பாண்டியன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார்,
திமுக ஊராட்சி செயலாளர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அனைத்திந்திய  இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பாரதி

தமிழகத்தில் 96 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், மேலும் வேலைவாய்ப்பற்ற காலங்களில் இளைஞர்களுக்கு நிவாரண நிதியாக ரூ 10 ஆயரம் வழங்க வேண்டும், மேலும் அரசாணை எண்
56ஐ ரத்து செய்ய வேண்டும்,
மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வங்கி, ரயில்வே துறை உள்ளிட்ட பணிகளில் தமிழக இளைகளுக்கு முன்னுரிமை வழங்க
வேண்டும் என கூறினார்


0 comments: