Sunday, September 27, 2020
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தீ பிடித்து எரிந்த கார்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் கார் கவிழ்ந்து தீ பிடித்து எரிந்து சாம்பலாயின.
சென்னை கீழ்பாக்கத்திலிருந்து பாஸ்கர், லார்வின் உள்ளிட்ட 5 பேர் காரில் மதுரை நோக்கி சென்றனர். கார் சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் வந்த போது அப்பகுதியில் உள்ள பிரிவு சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தில் இருவர் வந்தனர். அவர்கள் மீது கார் மோதாமல் இருக்க காரை திருப்பிய போது , சாலையின் தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்த்து. காரிலிருந்தவர்கள் 5 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். காயமடைந்தவர்கள் இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சாலையில் கவிழ்ந்து கிடந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த்து. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்க தீயிணை அனைத்தனர்.
இதனால் சென்னை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் போக்குவரத்து சுமார் 20 நிமிடம் பாதிக்கட்டது. சம்பவம் குறித்து சமயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...

0 comments:
Post a Comment