Sunday, September 27, 2020
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தீ பிடித்து எரிந்த கார்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் கார் கவிழ்ந்து தீ பிடித்து எரிந்து சாம்பலாயின.
சென்னை கீழ்பாக்கத்திலிருந்து பாஸ்கர், லார்வின் உள்ளிட்ட 5 பேர் காரில் மதுரை நோக்கி சென்றனர். கார் சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் வந்த போது அப்பகுதியில் உள்ள பிரிவு சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தில் இருவர் வந்தனர். அவர்கள் மீது கார் மோதாமல் இருக்க காரை திருப்பிய போது , சாலையின் தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்த்து. காரிலிருந்தவர்கள் 5 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். காயமடைந்தவர்கள் இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சாலையில் கவிழ்ந்து கிடந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த்து. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்க தீயிணை அனைத்தனர்.
இதனால் சென்னை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் போக்குவரத்து சுமார் 20 நிமிடம் பாதிக்கட்டது. சம்பவம் குறித்து சமயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment