Sunday, September 27, 2020
மக்காசோள பயிர்களை தாக்கும் படைப்புழுவை கட்டுபடுத்தும் தொழில் நுட்பங்களை மண்ணச்சநல்லூர் ஒன்றிய வேளாண்மை அலுவலக உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு வழங்கினார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் கரியமாணிக்கம் குறு வட்டத்தில் திருப்பட்டூர்,எதுமலை,சிறுகனூர்,வாலையூர்,பாலையூர்,பெரகம்பி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 800 ஹெக்டேர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்கின்றனர். இந்த மக்காசோள பயிர்களை படைப்புழு தாக்கி வருகிறது. இந்த படைப்புழு தாக்கத்தால் உரிய மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். இந்த படைப்புழு தாக்கத்திலிருந்து விடுபட விவசாயிகளுக்கு வேளான் அலுவலக அதிகாரிகள் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்னர்.
உழவியல் முறை
ஆழ உழுது 1 ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இட்டு படைப்புழுவின் கூட்டுப் புழுக்களை அழிக்க வேண்டும்.
சரியான பருவத்தில் விதைத்தல் மற்றும் பல்வேறு நாட்களில் ஒரே பகுதியில் விதைப்பதை தவிர்க்க வேண்டும்.
தொடர்ச்சியாக மக்காசோள பயிர்களை சாகுபடி செய்யாமல் சுழற்ச்சி முறையில் பயிர்களை கடைபிடிக்க வேண்டும்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பவேரியா அல்லது பேஸியான,30 எப் எஸ் தயோமீதாக்சாம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.பூஞ்சானக் கொல்லிகளைக் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட் டிருந்தால் அதனுடன் பூச்சிக் கொல்லிகளை கொண்டு விதைகளை நேர்த்தி செய்யலாம்.
இறவை மக்காசோள பயிர்களை 60 க்கு 25 செமீ இடைவெளியிலும்,மானாவரி மக்காசோள பயிர்களை 40 க்கு 20 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
இறவை மக்காசோளத்தில் கம்பு பயிரையும்,மக்காசோளத்தில் சோளப்பயிரையும் வரப்பு பயிர்களாக மக்காசோளம் விதைப்பதற்க்கு 15 நாட்களுக்கு முன்னதாக விதைத்து படைப்புழுக்களை அழிக்கலாம்.
படைப்புழுக்களை முட்டைப் பருவத்திலேயே அழிக்க டிரைக்கோகிரம்மா பிரிட்டியோசம் ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 6 சி.சி பயன்படுத்தி கட்டுபடுத்தலாம்.
வரப்பு பயிர்களாக தட்டைப்பயறு,சூரியகாந்தி,எள்,செண்டுமல்லி பயிர்களையும்,ஊடுபயிர்களாக உளுந்து,பாசிப்பயறு சாகுபடி செய்வதன் மூலம் படைப்புழுக்களை கட்டு படுத்தலாம்
இளங்குருத்துப் பருவத்தில்(15 - 20 நாட்களில்) அஸாடிராக்டின்1 இ.ஸி. 10 லிட்டருக்கு 20 மி.லி. வீதமும்,எமாமெம்டின் பென்சோவேட் 5 எஸ்ஜி 10 லிட்டருக்கு 4 கிராம் வீதமும்,நவலூரான்10 இஸி 10 லிட்டருக்கி 15 மி.லி என்ற அளவில் கலந்து இவற்றில் ஏதாவது ஒன்றை ஏக்கருககு 100 லிட்டர் என்ற அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
முதிர்ந்த குருத்து பருவத்தில் (40-45 நாட்களில்)
தயோடிகார்ப் 75 டபிள்யூ. பி 10 லிட்டருக்கு 20 கிராம் வீதமும்,ஸ்பைநோசட் 12 எஸ்.ஸி 10 லிட்டருக்கு 5 மி.லி வீதமும் மெடாரைஸியம் அனி சோப்பிலியே 1*10 ஸிஎப்யூ கிராம் 10 லிட்டருக்கு 80 கிராம் வீதம் ஏக்கருக்கு 200 லிட்டர் அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
கதிர் பிடிக்கும் பருவத்தில் (60-65 நாட்களில்) புளுபென்டையமைட் 480 எஸ்.ஸி 10 லிட்டருக்கு 9 மி.லி வீதமும், குளோரான்டிரானிலிப்புரோல் 18.5 எஸ்.ஸி 10 லிட்டருக்கு 5 மி.லி வீதம் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து படைப்புழுக்களை கட்டுப்டுத்தில் நல்ல மகசூலை விவசாயிகள் ஈட்ட முடியும் என்று படைப்புழுவை கட்டுபடுத்தும் தொழில் நுட்பங்களை மண்ணச்சநல்லூர் ஒன்றிய வேளாண் அலுவலக உதவி இயக்குநர் தாகூர் தெரிவித்தார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment