Tuesday, September 29, 2020
திருச்சி
திருப்பைஞ்ஞீலி கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய விநாயருக்கு 108 தேங்காய் உடைத்து சிவன்,எமதர்மன் சன்னதிகளில் சிறப்பு பூஜை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலியில் உள்ள ஸ்ரீலிவனேஸ்வரர் கோயிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பூரண உடல் நலம் குணமடைய தேமுதிகவின் வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் தலைமையில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைவர் கூடிய விரைவில் பூரண குணமடைந்து உடல் ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவதற்கு திருப்பைஞ்ஞீலி ஸ்ரீலிவனேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப் பு பூஜை செய்து 108 தேங்காய் உடைத்தனர்.எமதர்மராஜா சன்னதி,அருள்மிகு ஸ்ரீலிவனேஸ்வரர் உடனுறை அம்பாள் விசாலாட்சி சன்னதியில் சிறப்பு அபிஷேகம் செய்து மனமுருக பிரார்த்தனை செய்தனர். பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கோயில் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தனர். பின்னர் கோயிலுக்கு வந்த ஏழைஎளியோர், பக்தரகள்,பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர். இந்த பூஜை ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் வி.பி. தங்கமணி செய்திருந்தார்
இந்த சிறப்பு அபிஷேகம், பூஜையில் வடக்கு மாவட்ட செயலாளர்,கே.எஸ்.குமார்,மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் வி.பி. தங்கமணி, ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம்,மாவட்ட துனைச் செயலாளர் சுதாகர்,நகரசெயலாளர் கார்த்திகேயன்,ஒன்றிய துனைச் செயலாளர் ஐயப்பன்,ராஜேந்திரன்,மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment