Tuesday, September 29, 2020
திருச்சி
புதிய விவசாயம் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசையும், அதற்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசை கண்டித்தும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ்,மதிமுக, இந்திய, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஐஜேகே, கொங்கு மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து கே.என்.நேரு செய்தியாளரிடம் பேசும்பொழுது........ திமுக கூட்டணிக் கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியானது சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும். நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று அவர் கூறினார். இலால்குடி, பூவாளூர் மார்கெட், புள்ளம்பாடி, கல்லக்குடி, மணிகண்டம் வண்ணாங்கோவில், அந்தநல்லூர் ஜீயபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment