Showing posts with label சுள்ளியா. Show all posts
Showing posts with label சுள்ளியா. Show all posts

Sunday, October 19, 2014

On Sunday, October 19, 2014 by farook press in ,    
மேலும் பெண் உள்பட 2 பேர் சிக்கினர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கார் டிரைவர்தட்சிணகன்னட மாவட்டம் சுள்ளியா தாலுகா அஜ்ஜாவர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். கார் டிரைவர். இவரது மனைவி ஷோபா (வயது 35). இதற்கிடையே ஷோபா தனது கணவர் வெளியே சென்றவுடன், தனது வீட்டில் விபசாரம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த குமார், மனைவி ஷோபாவை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து விபசாரம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை குமார் வெளியே சென்றிருந்தார். பின்னர் இரவில் அவர் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது குமாரின் வீட்டில் ஜெயநகரை சேர்ந்த ஆஷா, சுள்ளியாவில் உள்ள தனியார் கல்லூரி ஊழியர் கருணாகர் ஆகியோர் விபரசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவரது மனைவி ஷோபாவும் வீட்டின் உள்ளே இருந்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், 3 பேரையும் வீட்டினுள் வைத்து வெளிப்புறமாக கதவை பூட்டியுள்ளார். பின்னர் சம்பவம் பற்றி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் குமாரின் வீட்டிற்கு விரைந்து வந்து 3 பேரையும் பிடித்தனர்.மேலும் சம்பவம் பற்றி சுள்ளியா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் குமாரின் மனைவி ஷோபா விபசார புரோக்கராக செயல்பட்டதும், தனது கணவர் வெளியே செல்லும் நேரத்தில் அவர் வீட்டில் வைத்து விபரசாரத் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து ஷோபா, ஆஷா, கருணாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டில் விபசாரம் நடத்தி வந்த மனைவியை, கணவனே போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.