Tuesday, July 22, 2014
உடுமலை, 22 : பிரதான கால்வாய் பாசனம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்து மடத்துக்குளத்தில் நாளை நடைபெற உள்ள அனைத்து கட்சி போராட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பெறப்படும் நீரைக்கொண்டு திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது.ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆற்று வழியாகவும், ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மழை போதிய அளவு பெய்யாததாலும், அடிக்கடி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதாலும் பிரதான கால்வாய் பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அணையில் ஓரளவு தண்ணீர் இருப்பதால் தென்னைகளை காக்கவும், கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்கவும் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி மடத்துக்குளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துசாமியிடம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் அந்த மனு கிடப்பில் போடப்பட்டது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து மடத்துக்குளம் நால்ரோட்டில் நாளை (23ம் தேதி) போராட்டம் நடைபெற உள்ளதாக அனைத்து கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் தரவு தெரிவித்துள்ளன.
இதில் விவசாயிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அனைத்து கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment