Tuesday, August 26, 2014
தோஷம் கழிப்பதாக விவசாயியிடம் பணம் வாங்கிக் கொண்டு தலைமறைவான ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் புதுவலசு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற முருகேஷ் (47). இவர் சோலார் அடுத்த நகராட்சி நகரில் அலுவலகம் அமைத்து ஜோதிடம் பார்த்து வருகிறார். திருமண தோஷம், பில்லி சூனியம் மற்றும் பல்வேறு தோஷங்களை நீக்குவதாக கூறி வந்துள்ளார்.
இவரை மொடக்குறிச்சி அடுத்த கூத்தம்பாளையத்தை சேர்ந்த விவசாயி குழந்தை வேல் (55) என்பவர் தோஷம் நீக்குவதற்காக அணுகியுள்ளார். தோஷத்தை நீக்கினால் உங்கள் வாழ்க்கையில் நலம் உண்டாகும் என்று கூறிய ஜோதிடர் விஜய், அதற்கு ரூ.5 ஆயிரம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட குழந்தைவேல், முன்பணமாக ரூ.2 ஆயிரத்தை நேற்று முன்தினம் கொடுத்துள்ளார். மீதி பணத்துடன் நாளை (நேற்று) வந்தால் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தோஷம் கழித்து விடலாம் என ஜோதிடர் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று மீதி பணம் ரூ.3 ஆயிரத்துடன் குழந்தைவேல் நகராட்சி நகரில் உள்ள ஜோதிட அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஜோதிடர் இல்லை. அலுவலகம் பூட்டிக் கிடந்தது. வீட்டில் போய் பார்த்தபோது அங்கும் அவர் இல்லை. தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிய ஜோதிடர், தன்னை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டதாக மொடக்குறிச்சி போலீசில் குழந்தைவேல் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மேலும் பலரிடம் இதே போல தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு தோஷம் கழிக்காமலேயே ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்தது. குறிப்பாக இளைஞர்களை அணுகி திருமண தோஷம் கழிப்பதாகக் கூறி கைவரிசை காட்டி வந்துள்ளார்.
இதனையடுத்து ஜோதிடர் விஜய் என்கிற முருகேசை லக்காபுரம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் புதுவலசு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற முருகேஷ் (47). இவர் சோலார் அடுத்த நகராட்சி நகரில் அலுவலகம் அமைத்து ஜோதிடம் பார்த்து வருகிறார். திருமண தோஷம், பில்லி சூனியம் மற்றும் பல்வேறு தோஷங்களை நீக்குவதாக கூறி வந்துள்ளார்.
இவரை மொடக்குறிச்சி அடுத்த கூத்தம்பாளையத்தை சேர்ந்த விவசாயி குழந்தை வேல் (55) என்பவர் தோஷம் நீக்குவதற்காக அணுகியுள்ளார். தோஷத்தை நீக்கினால் உங்கள் வாழ்க்கையில் நலம் உண்டாகும் என்று கூறிய ஜோதிடர் விஜய், அதற்கு ரூ.5 ஆயிரம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட குழந்தைவேல், முன்பணமாக ரூ.2 ஆயிரத்தை நேற்று முன்தினம் கொடுத்துள்ளார். மீதி பணத்துடன் நாளை (நேற்று) வந்தால் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தோஷம் கழித்து விடலாம் என ஜோதிடர் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று மீதி பணம் ரூ.3 ஆயிரத்துடன் குழந்தைவேல் நகராட்சி நகரில் உள்ள ஜோதிட அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஜோதிடர் இல்லை. அலுவலகம் பூட்டிக் கிடந்தது. வீட்டில் போய் பார்த்தபோது அங்கும் அவர் இல்லை. தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிய ஜோதிடர், தன்னை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டதாக மொடக்குறிச்சி போலீசில் குழந்தைவேல் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மேலும் பலரிடம் இதே போல தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு தோஷம் கழிக்காமலேயே ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்தது. குறிப்பாக இளைஞர்களை அணுகி திருமண தோஷம் கழிப்பதாகக் கூறி கைவரிசை காட்டி வந்துள்ளார்.
இதனையடுத்து ஜோதிடர் விஜய் என்கிற முருகேசை லக்காபுரம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
பொள்ளாச்சி, : பொள் ளாச்சி பகுதியில் ஆபாச படங்களை சி.டி. மற்றும் மெமரி கார்டுகளில் பதவிறக்கம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை...
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
மதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு பணம் அனுப்பப்படுகின்றது. இதில் பலமுறை கள்ள நோட்டுகள் வருவதாக ரிசர்...
-
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் ...
0 comments:
Post a Comment