Tuesday, August 26, 2014
தோஷம் கழிப்பதாக விவசாயியிடம் பணம் வாங்கிக் கொண்டு தலைமறைவான ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் புதுவலசு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற முருகேஷ் (47). இவர் சோலார் அடுத்த நகராட்சி நகரில் அலுவலகம் அமைத்து ஜோதிடம் பார்த்து வருகிறார். திருமண தோஷம், பில்லி சூனியம் மற்றும் பல்வேறு தோஷங்களை நீக்குவதாக கூறி வந்துள்ளார்.
இவரை மொடக்குறிச்சி அடுத்த கூத்தம்பாளையத்தை சேர்ந்த விவசாயி குழந்தை வேல் (55) என்பவர் தோஷம் நீக்குவதற்காக அணுகியுள்ளார். தோஷத்தை நீக்கினால் உங்கள் வாழ்க்கையில் நலம் உண்டாகும் என்று கூறிய ஜோதிடர் விஜய், அதற்கு ரூ.5 ஆயிரம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட குழந்தைவேல், முன்பணமாக ரூ.2 ஆயிரத்தை நேற்று முன்தினம் கொடுத்துள்ளார். மீதி பணத்துடன் நாளை (நேற்று) வந்தால் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தோஷம் கழித்து விடலாம் என ஜோதிடர் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று மீதி பணம் ரூ.3 ஆயிரத்துடன் குழந்தைவேல் நகராட்சி நகரில் உள்ள ஜோதிட அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஜோதிடர் இல்லை. அலுவலகம் பூட்டிக் கிடந்தது. வீட்டில் போய் பார்த்தபோது அங்கும் அவர் இல்லை. தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிய ஜோதிடர், தன்னை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டதாக மொடக்குறிச்சி போலீசில் குழந்தைவேல் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மேலும் பலரிடம் இதே போல தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு தோஷம் கழிக்காமலேயே ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்தது. குறிப்பாக இளைஞர்களை அணுகி திருமண தோஷம் கழிப்பதாகக் கூறி கைவரிசை காட்டி வந்துள்ளார்.
இதனையடுத்து ஜோதிடர் விஜய் என்கிற முருகேசை லக்காபுரம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் புதுவலசு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற முருகேஷ் (47). இவர் சோலார் அடுத்த நகராட்சி நகரில் அலுவலகம் அமைத்து ஜோதிடம் பார்த்து வருகிறார். திருமண தோஷம், பில்லி சூனியம் மற்றும் பல்வேறு தோஷங்களை நீக்குவதாக கூறி வந்துள்ளார்.
இவரை மொடக்குறிச்சி அடுத்த கூத்தம்பாளையத்தை சேர்ந்த விவசாயி குழந்தை வேல் (55) என்பவர் தோஷம் நீக்குவதற்காக அணுகியுள்ளார். தோஷத்தை நீக்கினால் உங்கள் வாழ்க்கையில் நலம் உண்டாகும் என்று கூறிய ஜோதிடர் விஜய், அதற்கு ரூ.5 ஆயிரம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட குழந்தைவேல், முன்பணமாக ரூ.2 ஆயிரத்தை நேற்று முன்தினம் கொடுத்துள்ளார். மீதி பணத்துடன் நாளை (நேற்று) வந்தால் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தோஷம் கழித்து விடலாம் என ஜோதிடர் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று மீதி பணம் ரூ.3 ஆயிரத்துடன் குழந்தைவேல் நகராட்சி நகரில் உள்ள ஜோதிட அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஜோதிடர் இல்லை. அலுவலகம் பூட்டிக் கிடந்தது. வீட்டில் போய் பார்த்தபோது அங்கும் அவர் இல்லை. தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிய ஜோதிடர், தன்னை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டதாக மொடக்குறிச்சி போலீசில் குழந்தைவேல் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மேலும் பலரிடம் இதே போல தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு தோஷம் கழிக்காமலேயே ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்தது. குறிப்பாக இளைஞர்களை அணுகி திருமண தோஷம் கழிப்பதாகக் கூறி கைவரிசை காட்டி வந்துள்ளார்.
இதனையடுத்து ஜோதிடர் விஜய் என்கிற முருகேசை லக்காபுரம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
0 comments:
Post a Comment