Tuesday, August 26, 2014
அந்தியூர், ; ஆப்பக்கூடல் காவல் நிலையத்திற்கு ரூ.44 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் காவல் நிலையம் கவுந்தபாடி செல்லும் மெயின்ரோட்டில் 1998ம் ஆண்டு முதல் கடந்த 16 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. போதிய இடவசதியில்லாமல் நெருக்கடியில் இயங்கி வருவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் மூலம் ஆப்பக்கூடல் காவல் நிலையம் கட்டிடம் கட்ட ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆப்பக்கூடல் காவல் நிலையத்திற்கு பவானி மெயின் ரோட்டில், கால்நடை மருத்துவமனை அருகில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது. புதியதாக கட்டப்படும் காவல் நிலையம் இரண்டு அடுக்குமாடிகளை கொண்டது.
பூமி பூஜையில், பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் பாலக்கால் போட்டு பணியைத் துவக்கிவைத்தார். எஸ்.ஐ.க்கள் மணி, ராமதிலகம், பூபதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
0 comments:
Post a Comment