Wednesday, September 24, 2014
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் சதீஸ் என்ற சதீஸ்பாண்டி (வயது 21). எலக்ட்ரீசியன். இவரும் சிவன் தியேட்டர் ரோட்டை சேர்ந்த கார்த்திக் (22), கோபால் (22) ஆகியோரும் நண்பர்கள்.
சம்பவத்தன்று நண்பர்கள் 3 பேரும் அங்குள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தினர். அப்போது கார்த்திக்கும் கோபாலும் நண்பர் சதீசிடம் பணம் கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை என்று சதீஸ் கூறினார்.
இந்நிலையில் பி.என். ரோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தத்துக்கு 3 பேரும் வந்தனர். தொடர்ந்து பணம் கேட்டு கார்த்திக்கும், கோபாலும் நச்சரித்தனர். தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று முடிவாக சதீஸ் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சதீசின் தலையில் வெட்டினர்.
வெட்டுக்காயம் அடைந்த சதீசுக்கு ரத்தம்கொட்டியது. அதிர்ச்சியடைந்த சதீஸ் சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த நண்பர்கள் 2 பேரும் ஓட்டம் பிடித்தனர்.
பொதுமக்கள் சதீசை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சதீஸ் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் கார்த்திக்கும், கோபாலும் திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர். நீதிபதியின் உத்தரவையடுத்த 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து சப்–இன்ஸ் பெக்டர் சசிகலா, ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment