Wednesday, September 24, 2014
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பூருக்கு பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை பழனியை சேர்ந்த டிரைவர் தங்கவேல் (வயது 50) ஓட்டி வந்தார்.
காங்கயம் அருகே கொடுவாய் வழியாக பஸ் வந்தபோது கொல்லி வாய்க்கால் பாளையம் என்ற இடத்தில் பஸ்சும், திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதின.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பழனியை சேர்ந்த ராமலட்சுமி (72) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி டிரைவர் புதுப்பட்டியை சேர்ந்த காளியப்பன் (42), பஸ் டிரைவர் தங்கவேல் (52) உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்ததும் அவினாசி பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக தங்கவேல் உள்பட 4 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் 7 பேர் வீடு திரும்பினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment