Wednesday, September 24, 2014
வெள்ளகோவில், செப். 24–
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பழனிச் சாமி(வயது 45). இவரது நண்பர் குப்புசாமி(55). இவர்கள் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேயுள்ள லக்கமநாயக்கன் பட்டியில் தங்கியிருந்து கிணறு தோண்டும் வேலை செய்து வந்தனர்.
பழனிச்சாமியும், குப்புசாமியும் வெள்ளகோவிலில் இருந்து லக்கம நாயக்கன் பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
லக்கமநாயக்கன் பட்டியை நெருங்கிய போது மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குப்புசாமி பலத்த காயமடைந்தார்.
பழனிச்சாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரையும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே குப்புசாமி பரிதாபமாக இறந்தார். லேசான காயமடைந்த பழனிச்சாமி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment