Thursday, September 11, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள இச்சிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் புவனேஸ்வரி(வயது 17). இவர் காங்கயம்–தாராபுரம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பினார். பின்னர் குளியல் அறைக்கு சென்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் ஊதியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மாணவி புவனேஸ்வரி எழுதிவைத்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் மாணவி என்ன எழுதியிருந்தார் என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். கடிதத்தின் அடிப்படையில் தான் விசாரிக்க உள்ளோம். விசாரணைக்கு பின்னர் தான் எதுவும் சொல்ல முடியும் என்று கூறிவிட்டனர்.
இந்த நிலையில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில் திடுக் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாணவி புவனேஸ்வரிக்கும், அதே பள்ளியில் படிக்கும் பிளஸ்–2 படிக்கும் மாணவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதல் விவகாரம் அரசல் புரசலாக வெளியே தெரியவந்தது. பின்னர் பள்ளி முழுவதும் இந்த தகவல் கசிந்தது.
இதையறிந்த பள்ளியின் ஆசிரியையும், ஆசிரியரும் மாணவியை கண்டித்ததாக தெரிகிறது. அதன் பின்னரும் காதல் நீடித்ததாகவே தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ–மாணவிகள் முன்னிலையில் மாணவி புவனேஸ்வரியை ஆசிரியர்கள் கண்டித்ததாக தெரிகிறது.
மேலும் பிளஸ்–2 படிப்பு தான் உன் வாழ்க்கையை தீர்மானிக்கும், எனவே நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறும் வழியைப்பார் என்று அறிவுரை கூறியுள்ளனர். மற்ற மாணவ–மாணவிகள் முன்னிலையில் ஆசிரியர்கள் நம்மை அவமானமாக பேசி விட்டார்களே என புவனேஸ்வரி மனவேதனை அடைந்தார்.
வீடு திரும்பிய அவர் வாழ்க்கையை முடித்துக் கொள்வதென்ற முடிவுக்கு வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கண்ட தகவல்கள் மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் மூலம் வெளியானதாக தெரிகிறது.
மாணவி தீக்குளித்து இறந்த தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் மாணவி படித்த பள்ளிக்கு விரைந்து சென்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ–மாணவிகளிடம் விசாரித்தார். பின்னர் மாணவி புவனேஸ்வரியை மற்ற மாணவ–மாணவிகள் முன்னிலையில் திட்டிய ஆசிரியை மற்றும் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். ஆசிரியர்கள் திட்டிய அவமானம் தாங்காமல் மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment