Thursday, September 18, 2014
On Thursday, September 18, 2014 by farook press in kanniyakumari
திருவட்டார் அருகே மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
தெருவிளக்கு எரியவில்லை
திருவட்டாரை அடுத்துள்ள வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 18-வது வார்டுகளில் கல்லறவிளை, செக்காளவிளை, கொட்டாரவிளை, கொச்சன்குளம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள தெரு விளக்குகள் சுமார் 3 மாதங்களாக எரியவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும், தெருவிளக்குகளை உடனே சரிசெய்யக்கோரி பேரூராட்சி நிர்வாகம், கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
நூதன போராட்டம்
இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.நேற்று முன்தினம் இரவு தெருவில் திரண்ட அந்த பகுதி மக்கள் அங்குள்ள மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைத்தனர். மேலும், தங்கள் கைகளில் தீப்பந்தம் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி கோரிக்கையை வற்புறுத்தி கோஷம் எழுப்பினர்.
இது பற்றி அந்த பகுதி மக்கள் கூறும்போது,“ தெரு விளக்குகள் எரியாததால் இரவில் பெண்கள் நடமாட அஞ்சும் நிலை உள்ளது. மேலும், நகை பறிப்பு உள்பட குற்றச்செயல்களும் நடைபெறுவதால் உடனடியாக தெருவிளக்குகளை எரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும்“ என்று தெரிவித்தனர்.
தெருவிளக்கு எரியவில்லை
திருவட்டாரை அடுத்துள்ள வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 18-வது வார்டுகளில் கல்லறவிளை, செக்காளவிளை, கொட்டாரவிளை, கொச்சன்குளம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள தெரு விளக்குகள் சுமார் 3 மாதங்களாக எரியவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும், தெருவிளக்குகளை உடனே சரிசெய்யக்கோரி பேரூராட்சி நிர்வாகம், கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
நூதன போராட்டம்
இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.நேற்று முன்தினம் இரவு தெருவில் திரண்ட அந்த பகுதி மக்கள் அங்குள்ள மின் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைத்தனர். மேலும், தங்கள் கைகளில் தீப்பந்தம் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி கோரிக்கையை வற்புறுத்தி கோஷம் எழுப்பினர்.
இது பற்றி அந்த பகுதி மக்கள் கூறும்போது,“ தெரு விளக்குகள் எரியாததால் இரவில் பெண்கள் நடமாட அஞ்சும் நிலை உள்ளது. மேலும், நகை பறிப்பு உள்பட குற்றச்செயல்களும் நடைபெறுவதால் உடனடியாக தெருவிளக்குகளை எரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும்“ என்று தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment