Thursday, September 18, 2014
உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. குமரி மாவட்டத்தில் ஓட்டு போட வேண்டிய வாக்காளர்கள் எந்த எந்த இடங்களில் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
குமரி மாவட்டத்தில் 33 உள்ளாட்சி பதவிகளுக்கு 107 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த இடைத்தேர்தல் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் மற்றும் ஓட்டு போடவேண்டிய இடங்கள் வருமாறு:–
நகரசபை
நாகர்கோவில் நகரசபை 37–வது வார்டு–பறக்கை ரோடு சந்திப்பில் உள்ள அரசு தொடக்கப்பளி, பத்மநாபபுரம் 11–வது வார்டு–தக்கலை அரசுமேல்நிலைப்பள்ளி, குழித்துறை 10–வது வார்டு–விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, 20–வது வார்டு–மார்த்தாண்டம் மாதவவிலாசம் நடுநிலைப்பள்ளி.
பேரூராட்சி
திற்பரப்பு 4–வது வார்டு–சேக்கல் புனித பீட்டர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி, ஏழுதேசம் 11–வது வார்டு–ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி, ஆற்றூர் 1–வது வார்டு–தோட்டவாரம் அரசு நடுநிலைப்பள்ளி, கொட்டாரம் 4–வது வார்டு–பெருமாள்புரம் யூனியன் அலுவலகம், கணபதிபுரம் 1–வது வார்டு–சூரப்பள்ளம் அரசு தொடக்கப்பள்ளி, கொல்லங்கோடு 8–வது வார்டு–கொல்லங்கோடு ஸ்ரீதேவி மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாகோடு 12–வது வார்டு–பேரை அரசு நடுநிலைப்பள்ளி, திங்கள்நகர் 11–வது வார்டு–மாங்குழி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி, பளுகல் 5–வது வார்டு–பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளி, இரணியல் 13–வது வார்டு–இரணியல் அரசு நடுநிலைப்பள்ளி, ரீத்தாபுரம் 2–வது வார்டு–சரல்விளை அரசு நடுநிலைப்பள்ளி.
ஊராட்சி ஒன்றியம்–மாவட்ட பஞ்சாயத்து
மேல்புறம் ஊராட்சி ஒன்றிய 5–வது வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து 1–வது வார்டு (மேல்புறம்) வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய இடங்கள்:
மஞ்சாலுமூடு ஊராட்சிக்கு உட்பட்ட முக்கூட்டுக்கல் திருக்குடும்ப தொடக்கப்பள்ளி, மஞ்சாலுமூடு அரசு தொடக்கப்பள்ளி, முழுக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பந்தல்விளை காமராஜர் நினைவு உயர்நிலைப்பள்ளி.
ஊராட்சி வார்டுகள்
தேரேகால்புதூர் 9–வது வார்டு–கோதைகிராமம் அரசு தொடக்கப்பள்ளி, தோவாளை 4–வது வார்டு–தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி, தர்மபுரம் 6–வது வார்டு–காற்றாடித்தட்டு அரசு நடுநிலைப்பள்ளி, வெள்ளிச்சந்தை 4–வது வார்டு–சரல் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி, 10–வது வார்டு–வெள்ளிச்சந்தை அரசு உயர்நிலைப்பள்ளி, குருந்தன்கோடு 4–வது வார்டு–கொடுப்பைக்குழி அரசு தொடக்கப்பள்ளி, ஆத்திவிளை 4–வது வார்டு–ஆலங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி, பேச்சிப்பாறை 2–வது வார்டு–குற்றியார் அரசு ரப்பர்கழக நடுநிலைப்பள்ளி, செறுகோல் 3–வது வார்டு–செறுகோல் அரசு தொடக்கப்பள்ளி, மத்திக்கோடு 10–வது வார்டு–மாத்திரவிளை புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி.
மிடாலம் 5–வது வார்டு–உதயமார்த்தாண்டம் அரசு உயர்நிலைப்பள்ளி, நட்டாலம் 6–வது வார்டு–வாழைத்தோட்டம் அரசு தொடக்கப்பள்ளி, விளாத்துறை 15–வது வார்டு–தும்பாலி தூய இருதய அன்னை தொடக்கப்பள்ளி, குளப்புறம் 1–வது வார்டு–பிராகோடு கிறிஸ்து அரசர் உயர்நிலைப்பள்ளி, மெதுகும்மல் 9–வது வார்டு–வாறுதட்டு எம்.எம்.கே.எம்.உயர்நிலைப்பள்ளி, மலையடி 7–வது வார்டு–மேல்பாலை அரசு தொடக்கப்பள்ளி.
காலை 7 மணிமுதல்...
மேற்கண்ட வாக்குச்சாவடிகளில் நகரசபை மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், பிற வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுச்சீட்டுகளும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது.
இதை முன்னிட்டு அந்த பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணியில் மொத்தம் 700 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment