Thursday, September 11, 2014
அவினாசி அருகே தெக்கலூரில் ஊருக்குள் புறவழிச்சாலை வழியாக சென்ற பஸ்களை பொது மக்கள் சிறை பிடித்தனர்.
அவினாசி ஒன்றியம் தெக்கலூர் திருப்பூர - கோவை மெயின்ரோட்டில் அவினாசியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு விசைத்தறிக்கூடங்கள் நூல்மில்கள், தனியார் கம்பெனிகள் அதிகளவில் உள்ளன.
தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக ஏராளமான பொதுமக்கள் தினசரி தெக்கலூர் வந்து கோவை, திருப்பூர் மற்றும் அவினாசிக்கு வந்து போகின்றனர். இது தவிர பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவர்கள் பஸ்சை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் மற்றும் கோவையிலிருந்து சென்று வரும் பஸ்கள் தெக்கலூருக்கு செல்லாமல் புறவழிச்சாலையில் சென்று விடுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புறவழிச்சாலையில் சென்ற பஸ்களை சிறைபிடித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் வெளியூர் செல்ல தெக்கலூர் பஸ்நிறுத்தத்தில் காத்திருந்தோம். பஸ்கள் அனைத்தும் ஊருக்குள் வராமல் சென்று விடுகின்றன. இதனால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம்.
ஏற்கனவே பலமுறை பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினோம். அப்போது போலீசார் வந்து இனிமேல் பஸ்கள் அனைத்தும் ஊருக்குள் வந்து பயணிகளை இறக்கி ஏற்றி செல்லும் என்றனர். ஆனால் அவ்வாறு பஸ்கள் வருவதில்லை.
தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கிருந்து வெளியூர்களுக்கு சென்று வருகிறோம். எனவே அனைத்து பஸ்களும் தெக்கலூருக்குள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பஸ்களை சிறைபிடித்துள்ளோம் என்றனர்.
தகவல் கிடைத்ததும் அவினாசி போலீசார் துணை சூப்பிரண்டு ராமசாமி, வட்டார போக்கு வரத்து அலுவலர் பால சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அனைத்து பஸ் நிர்வாகிகளையும் வரவழைத்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment