Thursday, October 09, 2014
மயிலாடுதுறை நெல்லை பாசஞ்சர் ரெயில் பெட்டியின் கழிவறைக்குள் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை மதுரை ரெயில்வே போலீசார் மீட்டனர்.
ஈரோடு–மயிலாடுதுறையில் இருந்து மதுரை வழியாக நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயில் மதுரை ரெயில் நிலைய 3–வது பிளாட்பாரத்திற்கு நேற்று மாலை 5.55 மணிக்கு வந்தது.
அந்த ரெயிலின் பயணிகளில் சிலர் அங்கிருந்த போலீசாரிடம் சென்று, 4–வது பெட்டியின் கழிவறையில் யாரோ ‘மர்ம’ நபர்கள் உள்ளனர். சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்க மறுக்கின்றனர் என கூறினர்.
இதனால் பதற்றமடைந்த ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டியின் கழிவறையை தட்டிப் பார்த்தனர். உள்ளுக்குள் இருந்து எவ்வித சத்தமும் வரவில்லை. இதனால் கழிவறை ஜன்னல் கண்ணாடியை உடைக்க முடிவு செய்தனர். அதன்படி கடப்பாரையை வைத்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே அந்த வாலிபரை மீட்பதற்காக கழிவறை கதவையும் உடைத்தனர். பின்னர் அந்த வாலிபரை அங்கிருந்து மீட்டு பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை குளிக்க வைத்தனர். சிறிது நேரத்தில் அவர் சுயநினைவுக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் ரவி (வயது23), ஈரோடு அண்ணாநகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து அந்த ரெயில், மாலை 6.45 மணிக்கு நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
0 comments:
Post a Comment