Thursday, October 09, 2014
மதுரை, தல்லாகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த சில நாட்களுக்கு
முன்பு தனது காரில் நாகமலை புதுக்கோட்டை சென்றார். அப்போது கார் மூதாட்டி
மீது மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போக்கு
வரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
விபத்து வழக்குகளில் போலீஸ் நிலையங்களிலேயே பெயில் பெற்றுக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது. இதையடுத்து மணிகண்டன் நாகமலை புதுக்கோட்டை சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் பெயில் கேட்டார். அதற்கு அவர் ரூ. ஆயிரம் தந்தால் பெயிலில் விடுவதாக தெரிவித்தார். உடனே மணிகண்டனும் ரூ. ஆயிரம் லஞ்சம் கொடுத்து பெயில் பெற்றதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு பிறகு குணசேகரன் விபத்து வழக்கு தொடர்பாக மீண்டும் ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. இசக்கி ஆனந்தன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை மணிகண்டனிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் இன்று காலை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரி அருகே நிற்பதாகவும், பணத்தை வந்து பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். உடனே சப்– இன்ஸ்பெக்டர் குணசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குணசேரகனை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
லஞ்சத்தை ஒழிக்க வேண்டிய போலீசாரே லஞ்சம் வாங்கியது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து வழக்குகளில் போலீஸ் நிலையங்களிலேயே பெயில் பெற்றுக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது. இதையடுத்து மணிகண்டன் நாகமலை புதுக்கோட்டை சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் பெயில் கேட்டார். அதற்கு அவர் ரூ. ஆயிரம் தந்தால் பெயிலில் விடுவதாக தெரிவித்தார். உடனே மணிகண்டனும் ரூ. ஆயிரம் லஞ்சம் கொடுத்து பெயில் பெற்றதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு பிறகு குணசேகரன் விபத்து வழக்கு தொடர்பாக மீண்டும் ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. இசக்கி ஆனந்தன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை மணிகண்டனிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் இன்று காலை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரி அருகே நிற்பதாகவும், பணத்தை வந்து பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். உடனே சப்– இன்ஸ்பெக்டர் குணசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குணசேரகனை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
லஞ்சத்தை ஒழிக்க வேண்டிய போலீசாரே லஞ்சம் வாங்கியது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
0 comments:
Post a Comment