Thursday, October 09, 2014
மதுரை, தல்லாகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த சில நாட்களுக்கு
முன்பு தனது காரில் நாகமலை புதுக்கோட்டை சென்றார். அப்போது கார் மூதாட்டி
மீது மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போக்கு
வரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
விபத்து வழக்குகளில் போலீஸ் நிலையங்களிலேயே பெயில் பெற்றுக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது. இதையடுத்து மணிகண்டன் நாகமலை புதுக்கோட்டை சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் பெயில் கேட்டார். அதற்கு அவர் ரூ. ஆயிரம் தந்தால் பெயிலில் விடுவதாக தெரிவித்தார். உடனே மணிகண்டனும் ரூ. ஆயிரம் லஞ்சம் கொடுத்து பெயில் பெற்றதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு பிறகு குணசேகரன் விபத்து வழக்கு தொடர்பாக மீண்டும் ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. இசக்கி ஆனந்தன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை மணிகண்டனிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் இன்று காலை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரி அருகே நிற்பதாகவும், பணத்தை வந்து பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். உடனே சப்– இன்ஸ்பெக்டர் குணசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குணசேரகனை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
லஞ்சத்தை ஒழிக்க வேண்டிய போலீசாரே லஞ்சம் வாங்கியது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து வழக்குகளில் போலீஸ் நிலையங்களிலேயே பெயில் பெற்றுக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது. இதையடுத்து மணிகண்டன் நாகமலை புதுக்கோட்டை சிறப்பு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் பெயில் கேட்டார். அதற்கு அவர் ரூ. ஆயிரம் தந்தால் பெயிலில் விடுவதாக தெரிவித்தார். உடனே மணிகண்டனும் ரூ. ஆயிரம் லஞ்சம் கொடுத்து பெயில் பெற்றதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு பிறகு குணசேகரன் விபத்து வழக்கு தொடர்பாக மீண்டும் ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. இசக்கி ஆனந்தன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை மணிகண்டனிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் இன்று காலை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரி அருகே நிற்பதாகவும், பணத்தை வந்து பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். உடனே சப்– இன்ஸ்பெக்டர் குணசேகரன் சம்பவ இடத்துக்கு சென்று லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குணசேரகனை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
லஞ்சத்தை ஒழிக்க வேண்டிய போலீசாரே லஞ்சம் வாங்கியது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment