Tuesday, January 13, 2015
மதுரையில் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் கதிரவன், காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆனையூர், குலமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ஆனந்தம் நகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகளை ஆணையாளர் கதிரவன் இன்று ‘திடீர்’ ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அவர் கூறியதாவது:–
மதுரை மாநகராட்சியின் 4 மண்டல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் மண்டலம் வாரியாக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது.
இந்த பணியில் உதவி ஆணையாளர்கள் தலைமையில் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், ‘அபேட்’ மருந்து தெளிப்பவர்கள், அம்மா திட்டப்பணியாளர்கள் உள்பட பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
‘அபேட்’ மருந்து தெளித்தல், கொசு புகை அடித்தல் மற்றும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது மாநகராட்சி மருத்துவ மனைகளை அணுகி தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சி மற்றும் தகுதியில்லாதவர்களிடமோ, தன்னிச்சையாகவோ மருத்துவம் பார்க்க வேண்டாம். டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கடைகளில் மருந்து வாங்க வேண்டாம். மருந்து கடைகள் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து– மாத்திரைகள் வழங்கக்கூடாது. மீறி வழங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் குணாளன், சுகாதார ஆய்வாளர் கோபால், சந்திரமோகன், மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment