Friday, April 10, 2015
உடுமலை,:. பிஏபி பிரதான கால்வாயில் ஸ்லேப்புகள் உடைந்து அதன் வழியாக தண்ணீர் கசிந்து விரயமாகிறது. எனவே கால்வாயை உடனே சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிஏபி பாசனத்திட்ட அணைகளில் ஒன்றான திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 90 அடி நீர்மட்டம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏறத்தாழ 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பிஏபி பிரதான கால்வாய் மூலம் 9 மாதத்துக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் மண்டல வாரியாக பாசனம் நடைபெறுகிறது. தற்போது 3ம் மண்டல பாசனம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், பிரதான கால்வாய் சில இடங்களில் சேதமடைந்துள்ளது. அணையில் இருந்து 12வது கி.மீட்டர் தூரத்தில் மொடக்குப்பட்டி பகுதியில் இருந்து 5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்காங்கே கால்வாய் கரையில் ஸ்லாப்புகள் பெயர்ந்து கிடக்கின்றன. கரையும் சேதமடைந்துள்ளது. அதன் வழியாக தண்ணீர் கசிந்து விரயமாகிறது. கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் உள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணல் மூட்டை அடுக்கி கால்வாய் மேலும் உடையாதவாறு காப்பதோடு பாசனம் முடிந்ததும் உடனே கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்நிலையில், பிரதான கால்வாய் சில இடங்களில் சேதமடைந்துள்ளது. அணையில் இருந்து 12வது கி.மீட்டர் தூரத்தில் மொடக்குப்பட்டி பகுதியில் இருந்து 5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்காங்கே கால்வாய் கரையில் ஸ்லாப்புகள் பெயர்ந்து கிடக்கின்றன. கரையும் சேதமடைந்துள்ளது. அதன் வழியாக தண்ணீர் கசிந்து விரயமாகிறது. கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் உள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணல் மூட்டை அடுக்கி கால்வாய் மேலும் உடையாதவாறு காப்பதோடு பாசனம் முடிந்ததும் உடனே கால்வாயை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment