Friday, April 10, 2015
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளனர்.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: திருப்பூர் மாவட்ட மக்களுக்கு ஏற்படும் நோய்களின் அறிகுறிகள் குறித்து கண்டறிவதற்காக, அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட மண்டல நோய் கண்டறியும் மையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதில் விலை உயர்ந்த நவீன மருத்துவ பரிசோதனைக் கருவிகள் பொருத்தப் பட்டு, மக்கள் முழு உடல் பரிசோனை செய்து கொ ள்ள ரூ.250 என நிர்ணயம் செய்யப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் என அரசு அறிவித்து, தற்போது மருத்துவ கருவிகளை இயக்குவதற்கான அலுவலர், நோய் தன்மை கண்டறியும் நிபுணர்கள் இல்லாததால் பல மாதங்களாக செயல்படாமல் மூடி முடங்கி கிடக்கிறது.
இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், நோய் தன்மை குறித்து அறிந்து கொள்ள முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடிச் சென்று அதிக கட் டணம் செலுத்த இயலா மல், பரிசோதனையும் செய்யாமல் நோய்க்கு ஆளாகி உயிரிழப்பு ஏற்ப டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.எனவே உரிய அலுவலர்களை நியமித்து, உடனடியாக முழு உடல் பரிசோதனைக் கூடத்தை செயல் படுத்துக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசு மருத்துவமனை முன் மா பெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இவ்வ £று தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...

0 comments:
Post a Comment