Friday, April 10, 2015
காங்கயத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், சக்தி நகரை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (50). இவரது மகள் அஸ்ரப் நிஷா (21). இவருக்கும் காங்கயம், ராஜாஜி வீதியை சேர்ந்த ஜாபர் அலி என்பவரின் மகன் நசீர் (25) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், வரதட்சிணை கேட்டு நசீர் தனது மனைவியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு நசீரின் தாயார் மும்தாஜ் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது.
இதனால், மனமுடைந்த அஸ்ரப்நிஷா செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அஸ்ரப்நிஷாவின் தந்தை காங்கயம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு ) பிச்சை, உதவி ஆய்வாளர் சாஸ்தா இந்துசேகரன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அஸ்ரப்நிஷாவின் கணவர் நசீர், அவரது தாயார் மும்தாஜ் ஆகியோர் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment