Friday, April 10, 2015
செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் கே.வி.மகிதர் பேசினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில், "தொழில் நிறுவனங்களில் செலவுகளை குறைப்பது எப்படி?' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு திருப்பூர், ஸ்ரீபுரம் அறக்கட்டளை அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
இதில், தொழில்நுட்ப ஆலோசகர் கே.வி.மகிதர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:
தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உற்பத்திச் செலவுகள் குறித்த தகவல்கள் தெளிவாகத் தெரிய வேண்டும். தாங்கள் பயன்படுத்தும் அலுவலகப் பொருள்கள், தொழிற்சாலையில் உள்ள கருவிகள் குறித்த தகவல்களும், அவற்றின் மதிப்பும் தெரிந்திருக்க வேண்டும்.
வீணாக எரியும் மின் விளக்குகள், ஆள்கள் இல்லாத அறையில் சுழலும் மின்விசிறிகளை தவிர்க்கும் முறைகளை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது என்பது கலாசாரம் என்ற விஷயத்தை அவர்களுக்கு விளக்க வேண்டும். லாபம் குறைகிறதே என்கிற கவலை வரும்போது தான் செலவுகள் குறித்த அக்கறை பிறக்கிறது. இந்தச் சூழ்நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும்.
விற்பனை, லாபம் குறித்த தகவல்களை நிர்வாகக் குழுவுக்கு தெரிவித்தால் போதும். ஆனால் உற்பத்திச் செலவுகள் குறித்த முழு விவரங்களும் அடிப்படைத் தொழிலாளர்கள் வரை தெரிந்திருக்க வேண்டும். செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என்றார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில், திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறையினர் ஏராளமானோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200 மதுபாட்டில்க...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment