Friday, April 10, 2015
செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் கே.வி.மகிதர் பேசினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில், "தொழில் நிறுவனங்களில் செலவுகளை குறைப்பது எப்படி?' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு திருப்பூர், ஸ்ரீபுரம் அறக்கட்டளை அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
இதில், தொழில்நுட்ப ஆலோசகர் கே.வி.மகிதர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:
தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உற்பத்திச் செலவுகள் குறித்த தகவல்கள் தெளிவாகத் தெரிய வேண்டும். தாங்கள் பயன்படுத்தும் அலுவலகப் பொருள்கள், தொழிற்சாலையில் உள்ள கருவிகள் குறித்த தகவல்களும், அவற்றின் மதிப்பும் தெரிந்திருக்க வேண்டும்.
வீணாக எரியும் மின் விளக்குகள், ஆள்கள் இல்லாத அறையில் சுழலும் மின்விசிறிகளை தவிர்க்கும் முறைகளை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது என்பது கலாசாரம் என்ற விஷயத்தை அவர்களுக்கு விளக்க வேண்டும். லாபம் குறைகிறதே என்கிற கவலை வரும்போது தான் செலவுகள் குறித்த அக்கறை பிறக்கிறது. இந்தச் சூழ்நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும்.
விற்பனை, லாபம் குறித்த தகவல்களை நிர்வாகக் குழுவுக்கு தெரிவித்தால் போதும். ஆனால் உற்பத்திச் செலவுகள் குறித்த முழு விவரங்களும் அடிப்படைத் தொழிலாளர்கள் வரை தெரிந்திருக்க வேண்டும். செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என்றார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில், திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறையினர் ஏராளமானோர் பங்கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment