Thursday, February 27, 2020
திருச்சியில் பாராளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி
டில்லியில் அதிகாரத்தை கையில் வைத்துள்ள மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் வன்முறை உள்ளிட்ட அசம்பவங்களை தவிர்த்திருக்கலாம். நீதிமன்ற நீதிபதிகள் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். மத்திய அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். குண்டர்களையும் ராணுவம், போலீசையும் வைத்து எந்த போராட்டத்தையும் அரசு ஒடுக்கி விட முடியாது.
சட்டம் என்பது சாதி மதம் மொழி இவற்றின் அடிப்படையில் இல்லாமல் தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இருக்கவேண்டும். மேலும் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் கூடிய வகையில் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் மக்களை நாடற்றவர்களாக மாற்றுவது கூடாது. இத்தகைய அச்சத்தால் தான் மக்கள் போராடி வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருக்கக்கூடிய சட்டம்தான் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றால் எதற்காக திருத்த சட்டம் கொண்டு வந்தார்கள். புது சட்ட வடிவில் பிரச்சனை இருக்கிறது என்பதைத்தான் மக்கள் போராட்டம் காட்டுகிறது. மக்களை தூண்டிவிட்டு யாரும் போராட வைக்க முடியாது. மக்களுக்கு பிரச்சனை ஏற்படும்போது மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் மக்களுக்காக குரல் கொடுத்து வந்த திறமையான சட்டமன்ற உறுப்பினர். நல்ல மனிதர் .
உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களில் மட்டுமில்லாமல், தமிழகத்தில் 65 விழுக்காடு தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது இத்தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் நிதி மக்களுக்கு சென்று சேரும்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் இடம் கேட்கிறதா? திமுக கொடுக்கிறதா? என்பதெல்லாம் தெரியாது. அது இரு கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்ய வேண்டிய ஒன்று. அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
மக்களுக்கு பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் பணிகள் நிறைய கிடைக்கின்றன.வளர்ச்சி நிதி 5 கோடியைக்கொண்டு மக்களை திருப்திப்படுத்த முடியாது. அந்த நிதியை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் அல்லது அந்த நிதியை நீக்கிவிட வேண்டும். வளர்ச்சி நிதியை கொண்டு தான் மக்களுக்கு ஒரு சில நன்மைகளை செய்ய முடிகிறது. என பாராளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள பிரப் ரோட்டில் ஒரு பூக்கடை உள்ளது. இந்த கடை அருகே இன்று காலை சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு சாரை...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...

0 comments:
Post a Comment