Tuesday, July 22, 2014

On Tuesday, July 22, 2014 by Anonymous in    
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 28 ஆண்டுக்கு பின் வரலாற்று சாதனையை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. கடந்த 17 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச தீர்மானித்தது. இத்னைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்சில் ரகானே சிறப்பாக ஆடிய 103 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜிஎஸ் பல்லன்ஸ் 110 ரன்களும், பிளன்கட் 55 ரன்களும் குவித்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 342 ரன்களுக் ஆட்டம் இழந்தது. முரளி விஜய் 95 ரன்களும், ரவீந்தர் ஜடேஜா68 ரன்களும், புவனேஸ்வர் குமார் 52 ரன்களும், குவித்தனர். இதனையடுத்து 319 ரன்கள் எடுத்தால் வெற்றிய என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் துவக்க வீரர்கள் கூக் 22 ரன்களுடனும், ரோம்சன் 7 ரன்களுடனும், பல்லான்ஸ் 27 ரன்களுடனும், பெல் ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனையடுத்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து கடைசி நாளான இன்று களம் இறங்கியது. 5 ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரூட், எம்எம் அலி ஜோடி100 ரன்கள் குவித்தது. இந்நிலையில் ரூட் 66 ரன்களுடனும், அலி 39 ரன்களுடனும் அவுட் ஆகினர். இதனையடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் இங்கிலாந்து அணி 88.3 ஓவரில் 224 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய இஷாந்த் சர்மா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். முன்னதாக முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழத்திய புவனேஸ்குமார், 36 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 52 ரன்களும் எடுத்து சிறப்பாக ஆடினார். 28 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணியை லார்ட்ஸ் மைதானத்தில் வென்றுள்ள இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments: