Tuesday, July 22, 2014
On Tuesday, July 22, 2014 by Anonymous in Sports
"கிரிக்கெட்டைப் போல இந்திய ஹாக்கி அணி சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படுகிறது. வெளி நாடுகளிலும் சவால்களை எதிர் கொண்டால் இந்திய அணியால் சாதிக்க முடியும்' என ஆஸ்திரேலியா முன்னாள் ஹாக்கி ஜாம்பவான் ஜேமி வேயர் தெரிவித்தார்.
ஐந்து முறை உலகின் சிறந்த ஹாக்கி வீரர் விருதை வென்ற ஜேமி வேயர் கூறியது:
கிரிக்கெட் அணியைப் போல இந்திய ஹாக்கி அணி சொந்த மண்ணில் சிறப்பாக ஆடுகிறது. ஆனால், வெளிநாடுகள் என்று வரும்போது தடுமாறுகின்றனர். வெளிநாட்டில் வானிலை, ஆடுகளம், உணவு என எல்லாமே மாறுபட்டு இருக்கும். இந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்டு முழு சக்தியை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணி முழுத் திறமையையும் வெளிப்படுத்தினால், நிச்சயம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறவது உறுதி. அதற்கு மேல் நடப்பதை இப்போது கணிக்க முடியாது.
கடந்த காமன்வெல்த் போட்டி இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது. அதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலியா அதிக கோல்கள் (8-0) அடித்தது. கடந்தமுறையுடன் ஒப்பிடும்போது தற்போதைய இந்திய அணியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பையில் நாங்கள், இறுதிச் சுற்றில் 6-1 என நெதர்லாந்தை வீழ்த்தினோம். ஆனால் இந்திய அணிக்கு எதிராக 4-0 என்ற கோல் கணக்கில்தான் வெற்றிபெற முடிந்தது.
இந்திய அணி சிறந்த அணிதான். ஆனால், உலகின் சிறந்த அணி என்பதை நிரூபிக்க இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment