Tuesday, July 22, 2014
On Tuesday, July 22, 2014 by Anonymous in Sports
"கிரிக்கெட்டைப் போல இந்திய ஹாக்கி அணி சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படுகிறது. வெளி நாடுகளிலும் சவால்களை எதிர் கொண்டால் இந்திய அணியால் சாதிக்க முடியும்' என ஆஸ்திரேலியா முன்னாள் ஹாக்கி ஜாம்பவான் ஜேமி வேயர் தெரிவித்தார்.
ஐந்து முறை உலகின் சிறந்த ஹாக்கி வீரர் விருதை வென்ற ஜேமி வேயர் கூறியது:
கிரிக்கெட் அணியைப் போல இந்திய ஹாக்கி அணி சொந்த மண்ணில் சிறப்பாக ஆடுகிறது. ஆனால், வெளிநாடுகள் என்று வரும்போது தடுமாறுகின்றனர். வெளிநாட்டில் வானிலை, ஆடுகளம், உணவு என எல்லாமே மாறுபட்டு இருக்கும். இந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்டு முழு சக்தியை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணி முழுத் திறமையையும் வெளிப்படுத்தினால், நிச்சயம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறவது உறுதி. அதற்கு மேல் நடப்பதை இப்போது கணிக்க முடியாது.
கடந்த காமன்வெல்த் போட்டி இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது. அதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலியா அதிக கோல்கள் (8-0) அடித்தது. கடந்தமுறையுடன் ஒப்பிடும்போது தற்போதைய இந்திய அணியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பையில் நாங்கள், இறுதிச் சுற்றில் 6-1 என நெதர்லாந்தை வீழ்த்தினோம். ஆனால் இந்திய அணிக்கு எதிராக 4-0 என்ற கோல் கணக்கில்தான் வெற்றிபெற முடிந்தது.
இந்திய அணி சிறந்த அணிதான். ஆனால், உலகின் சிறந்த அணி என்பதை நிரூபிக்க இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
0 comments:
Post a Comment