Tuesday, July 22, 2014
On Tuesday, July 22, 2014 by Anonymous in Sports
"கிரிக்கெட்டைப் போல இந்திய ஹாக்கி அணி சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படுகிறது. வெளி நாடுகளிலும் சவால்களை எதிர் கொண்டால் இந்திய அணியால் சாதிக்க முடியும்' என ஆஸ்திரேலியா முன்னாள் ஹாக்கி ஜாம்பவான் ஜேமி வேயர் தெரிவித்தார்.
ஐந்து முறை உலகின் சிறந்த ஹாக்கி வீரர் விருதை வென்ற ஜேமி வேயர் கூறியது:
கிரிக்கெட் அணியைப் போல இந்திய ஹாக்கி அணி சொந்த மண்ணில் சிறப்பாக ஆடுகிறது. ஆனால், வெளிநாடுகள் என்று வரும்போது தடுமாறுகின்றனர். வெளிநாட்டில் வானிலை, ஆடுகளம், உணவு என எல்லாமே மாறுபட்டு இருக்கும். இந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்டு முழு சக்தியை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணி முழுத் திறமையையும் வெளிப்படுத்தினால், நிச்சயம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறவது உறுதி. அதற்கு மேல் நடப்பதை இப்போது கணிக்க முடியாது.
கடந்த காமன்வெல்த் போட்டி இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாகவே விளையாடியது. அதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலியா அதிக கோல்கள் (8-0) அடித்தது. கடந்தமுறையுடன் ஒப்பிடும்போது தற்போதைய இந்திய அணியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பையில் நாங்கள், இறுதிச் சுற்றில் 6-1 என நெதர்லாந்தை வீழ்த்தினோம். ஆனால் இந்திய அணிக்கு எதிராக 4-0 என்ற கோல் கணக்கில்தான் வெற்றிபெற முடிந்தது.
இந்திய அணி சிறந்த அணிதான். ஆனால், உலகின் சிறந்த அணி என்பதை நிரூபிக்க இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
0 comments:
Post a Comment