Tuesday, July 22, 2014
On Tuesday, July 22, 2014 by Anonymous in Sports
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
செüரவ் கோஷல் மற்றும் தீபிகா பல்லிகல் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட ஸ்குவாஷ் அணி கிளாஸ்கோ புறப்பட்டு சென்றது. அவர்களுடன் மலேசியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் சுப்ரமணியன் சிங்காரவேலு, மகளிர் அணி பயிற்சியாளர் புவனேஸ்வரி குமாரி உள்ளிட்டோர் சென்றுள்ளனர். ஆனால், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அணியின் பயிற்சியாளராக உள்ள சைரஸ் அணியினருடன் செல்லவில்லை.
இது குறித்து துரோணாச்சாரியா விருது வென்ற அவர் கூறுகையில் "என்ன நடந்தது எனத் தெரியவில்லை. எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. தாமதமாக ஸ்காட்லாந்து செல்வேனா என்பதும் தெரியாது. மொத்தத்தில் அணியினருடன் இல்லாதது வருத்தம் அளிக்கிறது' என்றார்.
"பயிற்சியாளர் சைரஸ் எங்களுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருக்கும், எங்களுக்கும் இடையிலான உறவு சிறப்பாக இருந்தது. நாங்கள் அவரை "மிஸ்' செய்கிறோம்' என வீரர்கள் தெரிவித்தனர்.
இதற்கு இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு செயலாளர் ஸ்ரீவத்ஸன் பதிலளிக்கையில் "ஸ்குவாஷ் கூட்டமைப்பின் செலவில் சைரஸ் விரைவில் கிளாஸ்கோ செல்வார், அரசு செலவில் அல்ல' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
0 comments:
Post a Comment