Tuesday, July 22, 2014
On Tuesday, July 22, 2014 by Anonymous in Sports
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்குவாஷ் அணியினருடன் பயிற்சியாளர் சைரஸ் போஞ்சா, ஸ்காட்லாந்துக்கு செல்லாததால் வீரர், வீராங்கனைகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
செüரவ் கோஷல் மற்றும் தீபிகா பல்லிகல் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட ஸ்குவாஷ் அணி கிளாஸ்கோ புறப்பட்டு சென்றது. அவர்களுடன் மலேசியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் சுப்ரமணியன் சிங்காரவேலு, மகளிர் அணி பயிற்சியாளர் புவனேஸ்வரி குமாரி உள்ளிட்டோர் சென்றுள்ளனர். ஆனால், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அணியின் பயிற்சியாளராக உள்ள சைரஸ் அணியினருடன் செல்லவில்லை.
இது குறித்து துரோணாச்சாரியா விருது வென்ற அவர் கூறுகையில் "என்ன நடந்தது எனத் தெரியவில்லை. எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. தாமதமாக ஸ்காட்லாந்து செல்வேனா என்பதும் தெரியாது. மொத்தத்தில் அணியினருடன் இல்லாதது வருத்தம் அளிக்கிறது' என்றார்.
"பயிற்சியாளர் சைரஸ் எங்களுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருக்கும், எங்களுக்கும் இடையிலான உறவு சிறப்பாக இருந்தது. நாங்கள் அவரை "மிஸ்' செய்கிறோம்' என வீரர்கள் தெரிவித்தனர்.
இதற்கு இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு செயலாளர் ஸ்ரீவத்ஸன் பதிலளிக்கையில் "ஸ்குவாஷ் கூட்டமைப்பின் செலவில் சைரஸ் விரைவில் கிளாஸ்கோ செல்வார், அரசு செலவில் அல்ல' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
0 comments:
Post a Comment