Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break

கொடுங்கையூர் தாமோதரன் நகரை சேர்ந்தவர் கோபால். பிரபல ரவுடியான இவன் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருந்தன.
கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர் பகுதியில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் கோபாலை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவனிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி அங்கேயே திடீரென மயங்கி விழுந்தான். உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோபால் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக கொடுங்கையூர் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இணை கமிஷனர் சண்முகவேல், புளியந்தோப்பு துணை கமிஷனர் சுதாகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment