Saturday, September 20, 2014
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்பமுடியாது என்றும், கர்நாடக இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மாண்டலின் சீனிவாஸ் மரணம்
பிரபல கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நேற்று) உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.
மாண்டலின் என்ற இசைக்கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் மாண்டலின் சீனிவாஸ். இசைக்குடும்பத்தில் பிறந்த மாண்டலின் சீனிவாஸ் தன்னுடைய மாண்டலின் இசைக்கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச்செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டவர்.
யாராலும் நிரப்பமுடியாது
மத்திய அரசின் “பத்மஸ்ரீ”, “சங்கீத ரத்னா” உள்பட பல விருதுகளைப்பெற்றவர் மாண்டலின் சீனிவாஸ். மாண்டலின் சீனிவாசின் மறைவு கர்நாடக இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். இவர் விட்டுச்சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்பமுடியாது.
மாண்டலின் சீனிவாசை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மாண்டலின் சீனிவாஸ் மரணம்
பிரபல கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (நேற்று) உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.
மாண்டலின் என்ற இசைக்கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் மாண்டலின் சீனிவாஸ். இசைக்குடும்பத்தில் பிறந்த மாண்டலின் சீனிவாஸ் தன்னுடைய மாண்டலின் இசைக்கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச்செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டவர்.
யாராலும் நிரப்பமுடியாது
மத்திய அரசின் “பத்மஸ்ரீ”, “சங்கீத ரத்னா” உள்பட பல விருதுகளைப்பெற்றவர் மாண்டலின் சீனிவாஸ். மாண்டலின் சீனிவாசின் மறைவு கர்நாடக இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். இவர் விட்டுச்சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்பமுடியாது.
மாண்டலின் சீனிவாசை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...

0 comments:
Post a Comment