Saturday, September 20, 2014
அறச்சலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் சாவடிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 44). தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி உள்ளார். அதனால் சாவடிக்காடு பகுதியில் உள்ள வீட்டை அதே பகுதியில் வசிக்கும் ஈஸ்வரனின் மாமனார் அண்ணாமலை கவனித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை ஈஸ்வரனின் வீட்டுக்கு அண்ணாமலை சென்றார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தையும், வீட்டில் இருந்து எல்.ஈ.டி. டி.வி.யையும் காணாதது கண்டு திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணத்தையும், டி.வியையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலை உடனடியாக அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment