Saturday, September 20, 2014
அறச்சலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் சாவடிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 44). தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி உள்ளார். அதனால் சாவடிக்காடு பகுதியில் உள்ள வீட்டை அதே பகுதியில் வசிக்கும் ஈஸ்வரனின் மாமனார் அண்ணாமலை கவனித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை ஈஸ்வரனின் வீட்டுக்கு அண்ணாமலை சென்றார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தையும், வீட்டில் இருந்து எல்.ஈ.டி. டி.வி.யையும் காணாதது கண்டு திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணத்தையும், டி.வியையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலை உடனடியாக அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி_07.10.18 பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைக...
-
ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக இந்தாண்டு பக்தர்கள் அச்சமின்றி பாதய...
0 comments:
Post a Comment