Saturday, September 20, 2014
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நிச்சாம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). அவருடைய மனைவி பழனியம்மாள் (38). இவர்களுக்கு கார்த்தி (23), தங்கராசு (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் கார்த்தி திருப்பூர் பனியன் நிறுவனத்தில்வேலை செய்து வருகிறார். தங்கராசு பாலிடெக்னிக்கில் படித்து வேலை தேடி வந்தார். நேற்று காலை துணி துவைப்பதற்காக கருப்பசாமி, பழனியம்மாள் மொபட்டிலும், தங்கராசு சைக்கிளிலும் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றனர். பழனியம்மாளை மொபட்டில் இருந்து கீழே இறக்கிய கருப்புசாமி, சோப்பு வாங்க கடைக்கு சென்றார்.அப்போது தங்கராசு துணி துவைப்பதற்காக வாய்க்காலின் கரையில் இறங்கினார். எதிர்பாராதவிதமாக அவர் கால் இடறி வாய்க்காலுக்குள் விழுந்துவிட்டார். கரையில் நின்றுகொண்டு இருந்த தாய் பழனியம்மாள் மகனை காப்பாற்றுவதற்காக வாய்க்காலில் குதித்தார். அப்போது அவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த கருப்பசாமி மனைவியும், மகனும் வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்டு இருப்பதை பார்த்து பதறிப்போய் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி பொன்னாமலை தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீர் இழுத்து செல்லப்பட்ட தங்கராசுவையும், பழனியம்மாளையும் தேடினார்கள். அப்போது வாய்க்காலில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் தங்கராசுவின் உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பழனியம்மாளின் கதி என்ன? என்பது தெரியவில்லை. மீனவர்கள் உதவியுடன் பழனியம்மாளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment