Tuesday, July 22, 2014
On Tuesday, July 22, 2014 by Anonymous in Movies

இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோச்சடையான் ஒரு வழியாக இன்று வெளிவந்து விட்டது. படம் தொடங்குவதற்கு முன் பாட்ஷா ரஜினி பாணியில் கம்பீரமாக ஆரம்பித்து காலப்போக்கில் மாணிக்கம் ரஜினி போல் அமைதியாகிவிட்டது படம்.
இதை தொடர்ந்து இந்த படத்தில் ரஜினி நடிக்க வில்லை, படம் சரியில்லை என்று சிலர் கொளுத்தி போட, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் ரஜினியே ஒரு தனியார் தொலைக்காட்சியில் இதை பற்றி விவரமாக தெரிவித்தார். அப்பாடா!! ஒரு வழியா படத்தை ரிலிஸ் செய்தா போதும்ன்னு நினைத்த படக்குழுவிற்கு மறுபடியும் வந்தது பெரிய தலைவலி, இந்த முறை பணச்சிக்கல், இதனால் படம் 10 நாட்களுக்கு மேல் தள்ளி போனது, பின்பு ரஜினி தலையிட்டு பேசியதால் இந்த பிரச்சனையும் முடிவுக்கு வர, இன்று (மே 23) உலகம் முழுவதும் சுமார் 6000 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளிவந்தது தலைவர் படம்.
படத்தின் மிகப்பெரிய பலம் நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் தான், என்ன தான் இது அனிமேஷன் படம் என்றாலும் அதை மறக்கடித்து நம்மை அந்த உலகிற்கே கொண்டு செல்வது ரஜினியின் வாய்ஸ் தான், அவர் கண்ணில் மட்டும் இல்லை, அவரது குரலிலும் காந்தம் உள்ளது. மேலும் யார் என்ன சொன்னாலும் ரஜினியை தவிர வேறு யாரை வைத்தும் இந்த முயற்சியை செய்து இருக்க முடியாது, இதையும் ரஜினியால் மட்டுமே நிகழ்த்தி காட்ட முடியும்.
இப்படி பல பேரின் எதிர்பார்ப்போடு வெளிவந்து இருக்கும் கோச்சடையான் கதை என்னவென்றால், கலிங்கபுரி மற்றும் கோட்டைபட்டினத்திற்கு இடையே நடக்கும் அரசியல் மோதலின் முக்கிய நாயகன் ரணதீரன் என்கிற ராணா.
கலிங்கபுரி மன்னனிடம் அடிமைப்பட்டு கிடக்கும் போர்வீரர்களை மீட்டு அவர்களின் தாய் மண்ணில் சேர்க்க தந்திர நடவடிக்கைகளை கையாளுகிறான் ராணா. ரிஷிகோடனின் மகள் வதனா அவனை காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் ராணாவை கைது செய்து சிறையில் அடைக்க, அந்நேரம் கோச்சடையான் யாரென்று அவளிடம் தெரிவிக்கிறான். இறுதியில் போர்மேகம் சூழ்கிறது. அதனை எப்படி ராணா எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை.
படத்தின் மிகவும் பரிதாபமான நிலைமையில் இருப்பது தீபிகா படுகோனா தான், யார் இவர் என்று கண்டு பிடிப்பதற்கே படம் 8 வது ரீலை தொட்டுவிடுகிறது, இதில் பெரிய கவலை ரசிகனுக்கு தீபிகாவை இந்த கோலத்திலா பார்க்க வேண்டும் என்பது தான். மறைந்த மாபெரும் நடிகர் நாகேஷ் படத்தில் வருவது தொழில் நுட்பத்தின் உச்சம், மேலும் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராஃப், ஷோபனா என பல நட்சத்திர பட்டாளங்களை அனிமேஷனில் காட்டியிருப்பது சினிமா நுட்பம் தெரிந்தவர்கள் குறை கூறினாலும், ஒரு பாமர ரசிகனுக்கு கண்டிப்பாக விருந்து தான்.
ரஜினிக்கு பிறகு நம்மை மிகவும் கவர்வது ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தான், பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன, அதிலும் ’எங்கே போகுது வானம்’, ‘மெதுவாக தான்’ போன்ற பாடல்கள் எல்லாம் ரஹ்மானின் மாஸ்டர் பீஸ், குறிப்பாக பின்னணி இசை ஹாலிவுட் தரத்தில் உள்ளது.
முதலில் ராணாவை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க இருந்து பின்பு அதை கைவிட்டதால், அதை தொடர்ந்து உருவான படம் தான் கோச்சடையான் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் இவரே இந்த படத்திற்கும் கதை, திரைக்கதை அமைத்தார், ரஜினி ரசிகனின் பல்ஸை தெரிந்து வைத்திருக்கும் இயக்குனர்களில் கண்டிப்பாக நம்பர் 1 இவர் தான், திரைக்கதை எந்த இடத்திலும் சோர்வு தட்டவில்லை, ரஜினிக்கே உண்டான ஸ்டைலில் கலக்கி எடுத்து இருக்கிறார்.
என்ன இது? எப்படி ரஜினியை அனிமேஷனில் பார்ப்பது என கவலைப்பட்டாலும், படம் முடிந்த பிறகு தலைவரை பார்த்து திருப்தி மட்டும் கண்டிப்பாக உங்களுக்குள் வரும், இந்த மோசன் கேப்சர் என்ற தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து இயக்குனர் சௌந்தர்யாவை எழுந்து நின்று பாராட்டலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment